வெற்றிபெற்றும் கண்ணீர் விட்ட பாகிஸ்தான் வீரர் | Tear off victorious Pakistan player !

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுப் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத் துள்ளது.

வெற்றிபெற்றும் கண்ணீர் விட்ட பாகிஸ்தான் வீரர்

இத்தொடரில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளை யாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட் டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுதார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்து விட்டார்.

அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப் ரியாஷிடம், பாகிஸ்தான் சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் நீ லாஹுர் மைதான த்தில், நமது மக்களுக்கு முன் விளை  யாடுவதை பார்க்க வேண்டும். அது என் கனவு என தெரிவித்தாக வஹாப் கூறினார்.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிரு ந்தாலும், தனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரது கண்களில் கண்ணீராக பொழிந்தது.
அதுமாத்தி ரமின்றி அவர் தந்தை இறந்த பிறகு ஹோட்டலில் இருந்து தொலை பேசியில் அவரின் தாயிடம் தொடர்புக் கொண்டு பேசிய போது அவரது தாய் கூறியதாவது,

நீ லாஹுரில் விளை யாடுவதை பார்ப் பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்க வில்லை. எனினும் உனக்கு கிடைத்த வெற்றியை நினைத்து அவர் எங்கிருந் தாலும் சந்தோஷப் படுவார் என கூறியதாக வஹாப் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings