கட்சி ஆரம்பிக்க வேண்டுமா?

இந்தியாவில் உலகள விலான கட்சிகளும், தமிழகத்தில் பல தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பல இருக் கின்றன.
இருப்பினும், புதிது புதிதாகக் கட்சிகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

அரசியலில் விருப்பம் இருப்பவர் களுக்கு, கொஞ்சம் பிரபலமும் ஆன கூட்டத்தினர் களுக்கு மனதின் உள்ளூர ஒரு ஆசை அரித்துக் கொண்டே இருக்கும். 

எதோ ஒரு கட்சிக்கு தொண்டனாக இருப்பதை விட, நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?

ஆரம்பிக்கலாம் தான்.

ஆனால் அதன் சட்ட வழி முறை?
இதோ…சொல்லத் தானே இந்தக் கட்டுரையே…
தேர்தல் ஆணையத்தில் பதிவு:

ஒத்த கருத்துடை யவர்கள், அவர்களின் சங்கங்கள் / கழகங்கள் மற்றும் அமைப்புகள் ஒரு கட்சியாக உருவெடுக்க வேண்டும் எனில் தேர்தல் ஆணைய த்திடம் பதிவு செய்தல் வேண்டும்.


கட்சியாக விரும்பும் ஒரு குழு, அமைப்பு, கழகம் மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கிய போது நிகழ் நிலையில் இருப்பின், தொடங் கியதில் இருந்து 60 நாட்களுக் குள்ளும், அந்தக் குழு, 

இந்த மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் இதன் தொடக்க த்திற்கு பின் ஆரம்பிக்கப் பட்டிரு ந்தால் அமைக்கப் பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களு க்குள் விண்ணப்பம் செய்யப் படுதல் வேண்டும்.

அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத் தானது தேர்தல் ஆணைய த்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், 

அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்ப த்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கை யளவு, 

அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்ட மன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா?

ஆம் எனில் அது குறித்த தகவல், அந்த அமைப்பு/ கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன் றினால் அதைத் தீர்க்கும் Dispute resolution பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் 

எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்க விரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்த விதிகள், 

இணைப்பது, பிரிவது, கட்சி/ அமைப்பை கலைப்பது ஆகியவை ஏறுபடுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்த விதிகள் அனைத்தும்…

இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக் குறிப்புகள், இவை எல்லாம் போக, 

அந்தக் கழகம்/ கட்சி/ அமைப்பு இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக் கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை 

மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிரு க்கின்றது எனவும், இந்தியா வின் ஒருமைப் பாடு, இறையாண் மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டி ருக்க வேண்டும்.

(பிரிவு5)

தேர்தல் ஆணைய மானது, தான் பொருத்த மெனக் கருதும், அத்தகைய பிற விவரங்களைக் கழகம்/ கட்சி/ அமைப்பிடம் இருந்து கேட்டுப் பெறலாம்.

அத்தோடு, தேர்தல் ஆணையம் நிர்ணயி க்கும் தொகையினை டிமாண்ட் ட்ராஃப்டாக விண்ணப் பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த தகவல்கள் எல்லா வற்றையும் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் விணப்பித்த அந்த குழு/ அமைப்பு/ கழகத்தை கட்சியாக ஏற்பதா வேண்டாமா 

என்பதைக் குறித்து முடிவு செய்து, பின்னர் அந்த முடிவை, அந்த அமைப்பிற்குத் தகவல் தரும்.

அந்த அமைப்பு, பிரிவு 5-ல் குறிப்பிட்ட காப்புரைகளுக்கு அனுசரித்திருக்க வேண்டும் என்பதேமுக்கியமாக கவனிக்கப்படும்.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது.

நன்கொடைக்கான விதி

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனச் சட்டம் 1956 -ன் படி, கட்சி நபர் ஒருவரால், அல்லது அரசுநிறுவனம்

அல்லாத நிறுவனத்தால், மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைத் தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு.

அரசு நிறுவனங் களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது.

• அந்த நன்கொடை யானது மனமுவந்து அளிக்கப் பட்டிருக்க வேண்டும். வலுக் கட்டாய வசூல் கூடாது.

அந்த நன்கொடை யானது, The Company's Act - 1956ன் காப்புரை களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

நிறுவனம் என்றால் என்ன என The Company's Act - 1956ல் வரையறை செய்யப் பட்டுள்ளபடி, என்றும்,


அரசு நிறுவனம் என்றால் நிறுவனச் சட்டம் - 1956ன் பிரிவு 617ல் குறிப்பிட்ட படியும், 

நன்கொடை என்றால், அதே சட்டத்தின் பிரிவு 293 - A யின் கீழ் சொல்லப் பட்ட பொருளிலும், 

அதே சமயம், அரசியல் கட்சிக்கு ஏதேனும் நபரால் அளிக்கப் பட்ட ஏதேனும் நன்கொடை

அல்லது சந்தா தொகையி னையும் உள்ளடக்கும்…என இந்தப் பதங்களு க்கான பொருளை மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் விளக்குகிறது.

பிரிவு 29B ல் குறிப்பிடப் பட்ட ”நபர்” ஒருவரால் எனும் பதத்தில் உள்ள நபர் எனும் சொல்லானது,

வருமான வரிச்சட்டம் பிரிவு 2 (31)ன் கீழ் அதற்கு ஒதுக்கப் பட்டுள்ள பொருளைக் கொண்டிருக்கும். 


ஆனால், அரசு நிறுவனம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசினால் நிதியுதவி முழுமையாக

அல்லது பகுதியாக அளிக்கப்படும் ஒவ்வொரு செயற்கை யான சான்றாயர் 'நபர்'எனும் பதத்தினுள் அடங்காது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 2 (31) ”நபர்” எனும் பதத்திற்குப் பொருள் விளக்கம் தருகிறது. 

அதன் படி,

”person” includes-

An individual,

A Hindu undivided family,

A company,

A firm

An association of persons or a body of individuals,

whether incorporated or not,


A local authority, and

Every artificial juridical person, not falling within

any of the preceding sub-clauses;

ஆனால், அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, மற்றும் அரசினால் நிதியுதவி பகுதியாக

அல்லது முழுதுமாகப் பெறும் செயற்கையான நபர், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின் 'நபர்' எனும் 

வரையறையின் கீழ் வர மாட்டார். அதாவது, அரசு நிறுவனங்கள், மற்றும் மேற்கூறியவர் களிடமிருந்து, ஒரு அரசியல் கட்சியின் நபர் நன்கொடை வாங்குதல் கூடாது.

அப்படி அரசியல் கட்சிகளினால் வாங்கப்படும் மற்றும் வாங்கப் பட்ட நன்கொடை யினை, அக்கட்சிகள், நிதியாண்டு அறிக்கை யினை தயாரிக்க வேண்டும். 

அதாவது, அக்கட்சியின் பொருளாளர், அல்லது இதன் பொருட்டே அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப் பட்ட ஏதேனும் ஓர்நபர், ஒவ்வொரு நிதியாண் டிலும், அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அவை யாவன:

அந்தந்த நிதியாண்டில், நபர் எவரிட மிருந்தேனும், ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை, அரசு நிறுவனங்கள் அல்லாத, நிறுவனங் களிடமிருந்து 

ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை, ஆகிய தகவல்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டி ருக்கும் படிவத்தில்அமைந் திருக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 139ன் கீழ் அந்த நிதியாண்டிற் கான வருமான விவர அறிக்கை தாக்கல்

செய்வதற் கான குறிப்பிட்ட தேதிக்கு முன், உட்பிரிவு (1) ந் கீழான நிதியாண்டு அறிக்கை யினை 

அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது இதன் பொருட்டு அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப் பட்ட நபர் தேர்தல் ஆணைய த்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது அரசியல் கட்சியினால் இதன் பொருட்டு

அதிகாரம் அளிக்கப் பட்ட ஒரு நபரானவர், உட்பிரிவு (3) ந் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறினால், 

வருமான வரிச் சட்டத்தில் எப்படி இருப்பினும், அந்த அரசியல் கட்சி அந்தச் சட்டத்தின் கீழ் வரி நிவாரணம் ஏதும் பெற உரிமை உடையது அன்று.

மேற் சொன்னவை, ஒரு அமைப்பை கட்சியாக தேர்தல் ஆணைய த்தின் கீழ் எப்படிப் பதிவு செய்வது என்பதைப் பற்றி மட்டுமே.
Tags:
Privacy and cookie settings