இதை செய்தால் 2050 ல் தண்ணீர் பஞ்சம் இருக்காது !

பருவ மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்புவது ஒரு பக்கம் இருந்தாலும், கோடை காலமான மே, ஜூன் மாதங்களில்
இதை செய்தால் 2050 ல் தண்ணீர் பஞ்சம் இருக்காது !
சென்னையில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுவது வழக்கமாக உள்ளது.


நமக்கு கிடைக்கும் மழையை நாம் இயன்றவரை சேமித்து வைத்துக் கொண்டால் இப்பிரச்சினை யிலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ள முடியும். 

அரசாங்கம் என்ன சார் செய்யுது என கேள்வி எழுப்பி நேரத்தை வீணடித்துக் கொண்டிருப் பதை விட,

நம்மால் முடிந்த அளவுக்கு மழை நீரை சேமித்து வைப்பதற் கான நடவடிக்கை களை முன்னெடுப்பது நல்லது. 

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திரு ந்தாலும், மழை நீர்சேகரிப்பு தொட்டி 

மற்றும் உபகரணங் களை நிறுவி யிருந்தாலும் நம்மால் இன்னும் தண்ணீர் பிரச்சினை யிலிருந்து மீள முடிய வில்லை.

இக்கட்டுரை யில் மழை நீரை இன்னும் எப்படியெல்லாம் சேமிக்க முடியும் என பார்க்கலாம்.

மழைநீர் தொட்டிகள்:

இந்த முறையை நம் வீட்டுக்குள் இருந்தே செயல் படுத்த முடியும். மொட்டை மாடியில் அல்லது வீட்டின் மேற் கூரையில் விழும் மழை நீரை, பிரித்யேக செயற்கை வழித்தட வசதிகள் மூலம் ஒருங் கிணைத்து, 

இதை செய்தால் 2050 ல் தண்ணீர் பஞ்சம் இருக்காது !


அதை பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் நிரப்பிக்கொள்ளலாம். இம்மாதத்தில் அதிசயமாக 100 மி.மீ. மழை கிடைக்கும் என வெதர்மேன் தெரிவித் துள்ளார். 

எனவே கிடைக்கும் மழையை குறைந்தது 5 பேரல்களில் சேமித்து வைக்கும் போது 5, 6 வாரங்களுக்கு அந்த நீரை பயன் படுத்த இயலும்.

கால்வாய்களுக்கு அனுப்பலாம்

காடு அல்லது வயல் வெளிகளில் பொழியும் மழையை கால்வாய்கள் அமைத்து ஓடை களுக்கு கொண்டு சேர்க்கலாம்.

ஓடை வழியாக ஆறுகளு க்கும், ஆறுகள் மூலமாக அணைக ளுக்கும் தண்ணீர் சென்றடையும். 

இதன் மூலம் விவசாயமும் செழிக்கும். இயற்கையான முறையில் மழை நீரானது நிலத்தடி நீரோட்டத் துடனும் இணையும். இதனால் காணாமல் போன நிலத்தடி நீர்மட்டம் திரும்பக் கிடைக்கும்.

இதை செய்தால் 2050 ல் தண்ணீர் பஞ்சம் இருக்காது !


விவசாயத் திற்கும், நகர்புற குடிநீர் தேவைக்கும் பெரிதும் உபயோக மாக இருக்கும்.

மழை நீர் சேகரிப்பு பணிகளை இளைஞர்கள் ஒன்றிணைந்து மேற் கொண்டு இயற்கையை காத்திட வேண்டும்.

நிலத்தடி குழாய்கள்:

கிராமப் புறங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் மட்டும் தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்பதில்லை.

நகர்புறங் களிலும் மழை நீரைக் கொண்டு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க இயலும்.

நிலத்தடி குழாய்கள், மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதன் மூலம் நகர்களிலும் நிலத்தடி நீரோட்டத் திற்கு உயிர் கொடுக்க இயலும்.

நகர்ப்புற குடிநீர் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய இயலும். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கு மென்றால் புவி வெப்ப மயமாதல் தானாக குறையத் தொடங்கி விடும்.

பொது கிணறுகள்:

கணிசமான மக்கள் தொகை உள்ள பகுதியில் ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கிணறு வெட்டியும் கூட, அப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க இயலும்.

இந்த திட்டம் பருவ மழைக் காலத்திற்கு மிக மிக உகந்ததாக இருக்கும்.

மொத்த மழை நீரும் இந்த கிணற்று க்குள் சென்றடையு மாறு குழாய்கள் அல்லது காய்வாய்கள் அமைத்து மழை நீரை சேமிக்கலாம்.

மழைநீர் தோட்டம்:

வீட்டில் தோட்டம் வைத்திருப்ப வர்களா நீங்கள்? அப்படி யென்றால் உங்களாலும் மழை நீரை சேமித்து வைக்க இயலும்.

உங்கள் தோட்டங்களில் புதைக்குழாய்கள் பதித்து, அதன் மூலம் மழை நீரை நிலத்திற்குள் சேமிக்க முடியும்.

இதை செய்தால் 2050 ல் தண்ணீர் பஞ்சம் இருக்காது !


இதற்கான கட்டமைப்பு வேலைகளை செய்து கொடுப்பதற்காக சில சேவை நிறுவனங் களும் இயங்கி வருகின்றன.

பெரும்பாலும் நகர்ப் புறங்களில் இதற்காக ப்ரித்யேக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இவ்வசதியை பெற முடியும்.

இத்திட்டத்தை செயல் படுத்த செலவும் சற்று அதிகம் பிடிக்கும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் நாளைய நீராதாரம் விலை மதிப்பற்றது ஆகும்.
Tags: