எட்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்... நர்ஸ் !

பிரிட்டனைச் சேர்ந்த 40 வயதான தாய் சோஃபி எம்மா ரோஸ். குழந்தைகளுக்கு எட்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என வீடியோவில் பேசி யூ டியூபில் பகிர்ந்து வருகிறார்.
எட்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்... நர்ஸ் !
இவர் நர்சாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இவருடைய மகனுக்கு நான்கு வயதாகிறது. 

இன்னும் நான்கு வயது வரை தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுக்கவிருப்பதாக தெரிவித் துள்ளார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல வீடியோக்களை பகிரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் பதிந்த வீடியோவை எட்டு மில்லியன் பேர் பார்த்து ள்ளனர்.

இதற்கு எதிர் கருத்துகளும் வந்த வண்ணம் உள்ளன. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களே. 
குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதில் தாய்க்கு அக்கறைத் தேவை. எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட மாட்டேன்.

இனியும் தொடர்ந்து வீடியோக்களை பதிந்து கொண்டே இருப்பேன் எனவும் கூறியுள்ளார் சோஃபி எம்மா ரோஸ்
Tags:
Privacy and cookie settings