ப்ரணிதா எனக்காக தாங்கி கொண்டார்.. இயக்குனர் | Pranita had endured for me.. Director !

நடிகை ப்ரணிதாவுக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் இல்லை என்பார்கள். இந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். கூட இருக்கிற மக்கள், ‘தமிழ் இண்டஸ் ட்ரியில், நீ எவ்வளவு அலட்டறியோ, அவ்வளவு மதிப்பாங்க’ என்று சொல்லி தொலைய,


அம்மணியை கையிலேயே பிடிக்க முடியலை. இப்படி இண்டஸ்ட்ரி சொன்னாலும் , ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி ப்ரணிதா என்றாலே உருகி பேசுகிறார்.

ஒரு ஷூட்டிங் ஸ்பாட் மலைப்பகுதியில் இருந்துச்சாம்.அங்க மேலே ஏறி சென்று விட்டாராம். நடந்து தான் போக முடியுமாம். பெண்களுக்கு ஒரு வசதியும் செய்து தர முடியாதாம்.

அங்க ப்ரணிதா மூணு நாள் தங்கி நடிச்சி தந்தாராம். படம் நல்லா வர வேண்டும் என்ற இயக்குனரின் உழைப்புக்காக அந்த சவுகரிய குறைச் சலையும் தாங்கிக் கொண்டாராம்.

அப்படிப் பட்ட ப்ரணிதா, இந்த படத்துக்கு அப்புறம் வேற ரேஞ்சிக்கு வருவார்ன்னு எதிர் பார்க்கிறாராம். காமெடி படமாம். பொங்கலுக்கு பைரவாவுடன் மோதுகிறது.
Tags: