யூனிபார்முடன் களத்திற்கு வந்த எஸ்.ஐ !

மத்திய அரசுக்கு எதிரான ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது.
யூனிபார்முடன் களத்திற்கு வந்த எஸ்.ஐ !
மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்தவர்களும் தமிழால் இணைந்தனர். இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டி ருந்த

போக்கு வரத்துத் துறை எஸ்.ஐ. சேகரன் என்பவர் சீருடையுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். உங்கள் போராட்டத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. 

எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை. நானும் உங்களோடு போராடுகிறேன் என்றார். ஆனால் போராட்டக் காரர்கள், ஐயா நீங்கள் இப்படி சொன்னதே எங்களுக்கு போதும்.
உங்கள் வீட்டில் உங்களது மகன்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள், உணர்வுள்ள ஒரு தமிழர் காவல்துறை அதிகாரியாக இருப்பது தான் எங்களுக்குத் தேவை என அனுப்பி வைத்தனர்.
Tags:
Privacy and cookie settings