திறக்கிறது வாடிவாசல்.. நானே தொடங்கி வைப்பேன்.. பன்னீர் செல்வம் !

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பீட்டாவை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திறக்கிறது வாடிவாசல்..  நானே தொடங்கி வைப்பேன்.. பன்னீர் செல்வம் !
ஜல்லிக் கட்டுக்கு அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.

அங்கிருந்து இன்று முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப் படும்.

வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து ஓடி வரும். நானே ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன். ஜல்லிக் கட்டுக்கு இனி தடையே இருக்காது என்றார்.
Tags:
Privacy and cookie settings