பொது மன்னிப்பை எதிர்நோக்கும் ஓமன் தொழிலாளர்கள் !

0
ஓமனில் பணி நிமித்தம் சென்றுள்ள பன்னாட்டு தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு 
பொது மன்னிப்பை எதிர்நோக்கும் ஓமன் தொழிலாளர்கள் !
வேலை வழங்கிய முதலாளிகளை விட்டும் வெளியேறி பிற இடங்களில் வேலை வாய்ப்புக் களை சட்ட விரோதமாக தேடிக் கொள்கின்றனர், 

இதில் நியாயமான காரணம் இருப்பதைப் போலவே அநியாயமான காரணங்களும் உண்டு. 

இவர்களில் பலரை ஒமன் தலைநகர் மஸ்கட் மாநகரின் முத்ராஹ் பிரதேச ஹம்ரியா பகுதியில் அதிகாலை 5 மணி முதல் அன்றாட தற்காலிக (அத்த கூலி) வேலை வாய்ப்புக்களுக்காக வரிசையில் காத்திருப்பதை காணலாம்.

இப்படி தங்களின் கம்பெனிகளை, முதலாளிகளை விட்டும் வெளியேறியோர் சுமார் 60,000 பேர் எனவும் இவர்களில் பெரும் பான்மையினர் பங்களாதேஷ், பாகிஸ்தான் 

மற்றும் இந்தியா போன்ற நாடுகளி லிருந்து வந்தவர்கள் எனவும் ஓமானிய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது பல வளைகுடா நாடுகளிலிலும் நிலவும் பொருளாதார பிரச்சனை களின் காரணமாக வேலை வாய்ப்பிலும் பிரச்சனைகள் ஏற்பட் டுள்ளதால் கடந்த சுமார் 4 மாதங்களாக சட்ட விரோதமாக 

வெளியில் வேலை பார்ப்போருக் கான வேலை வாய்ப்புகள் குறைந்து போதிய வருமானமின்றி திண்டாடி வருவதால் பலரும் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர்.

ஆனால் முறையாக வெளியேற வேண்டுமானால் பலவித அபராதங் களையும் செலுத்தினால் மட்டுமே முடியும் இல்லையேல் பொது மன்னிப்பு ஒன்றே வழி.
சட்டவிரோத தொழிலாளி ஒருவர் ஓமனை விட்டு வெளியேற வேண்டுமானால் விமான நிலையத்தில் விசா கட்டணமாக 20 ரியால், 

சட்ட விரோதமாக தங்கியிருந்த ஒவ்வொரு மாதத்திற்கும் 19 ரியால்கள் என வேலை வாய்ப்புத் துறை அமைச்ச கத்திற்கும், 

ஓடிப்போன தற்காக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட 400 ரியால்களையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் 

இத்தகைய தொழிலாளர் களால் இந்த அபராதங்கள் செலுத்த முடியாதவை என்பதால் அவர்கள் ஓமன் அரசின் கருணையை எதிர் பார்த்துள்ளனர்.

இதற்கு முன் 2005, 2007 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொதுமன்னிப்பு வழங்கப் பட்டது போல் இந்த ஆண்டும் பொது மன்னிப்பு வழங்கப் படுமா என வினவப்பட்ட போது 

'இன்றைய நிலையில் அப்படி ஒரு திட்டமே அரசிற்கு இல்லை' என வேலை வாய்ப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 19,000 சட்ட விரோத தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விண்ணப் பித்திருந்த தாகவும் அவர்களில் பலர் சட்ட நடவடிக்கை களுக்கு 

பின் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். இன்னொருபுறம் சட்ட விரோத தொழிலாளர்களை கைது செய்யும் அதிரடி சோதனை நடவடிக் கைகளும் தொடர்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings