ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற அமைப்பு உச்சநீதி மன்றத்தில் இன்று பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந் துள்ளது.
ரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் அப்பல்லோ மருத்துவ மனையிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா, நடிகை கவுதமி ஆகியோர் சந்தேகம் எழுப்பியி ருந்தனர்.
இந்த நிலையில் இந்த பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.