குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்களுக்கு நன்றி - ஜெயலலிதா !

அதிமுக வெற்றிக்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருவேன் என்று கூறியுள்ளார். 
அதிமுக 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற தகவல் வெளியான நிலையில் மதியம் 12.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: 

வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப ஆட்சிக்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன். 

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். தமிழக மக்களுக்கு நான் என்னென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மீண்டும் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தது ஒரு சரித்திர சாதனை. 

இந்த சாதனையை எனக்கு தந்த பெருமை தமிழக மக்களையே சாரும். திமுகவின் பொய் பிரசாரங்களை மக்கள் தவிடுபொடியாக்கிய தேர்தல் இது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Tags: