தோழி தூக்கில் தொங்கியதை லைவாக பார்த்து அதிர்ந்த நண்பர் !

ஒடிஷாவில் 34 வயது ஆய்வு மாணவி ஒருவர் தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருக்கையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தோழி தூக்கில் தொங்கியதை லைவாக பார்த்து அதிர்ந்த நண்பர் !
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மினரல்ஸ் அன்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜியில் ஆய்வு மாணவியாக இருந்து வந்தவர் சுபலக்ஷ்மி ஆச்சார்யா(34).
அம்மாடியோ.. புதிய விதி வந்த பின் வசூலான அபராத தொகை இவ்வளவா - கண்ண கட்டுதே !
அவர் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மன்சேஷ்வரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்தார். 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் நாக்பூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் செல்போனில் வீடியோ காலிங் செய்துள்ளார்.

வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் ஒரு துணியை எடுத்து தனது கழுத்தில் போட்டு முடிச்சுப் போட்டுள்ளார். 
பின்னர் அவர் தூக்கில் தொங்கிவிட்டார். இதை பார்த்து பதறிய அந்த நண்பர் உடனே மன்சேஷ்வர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
35 வயதுக்கு மேல் இந்தப் புற்றுநோய் வரலாம் !
போலீசார் சுபலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய அவரை மீட்டு ஆச்சார்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

சுபலக்ஷ்மி தனது தற்கொலையை வீடியோ எடுக்கும் வகையில் செல்போனை உயரமான இடத்தில் வைத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings