மலட்டுத் தன்மை.. புரிதலும் அணுகு முறையும் !

மனைவி யிடமும் கேட்கத் தொடங்க ப்படும் கேள்விகள் தான்.. "விசேஷம் ஏதாவது உண்டா?", "இது வரையிலும் ஒன்று மில்லையா?" போன்றவை.
 

"அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்து தான்," என்று நழுவுவ துக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம்.

ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தை யைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமா வதினால் வருத்தமும் உண்டாக தொடங் குகிறது.

அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ் சமாக ஏற்படும். கடைசி யில், மருத்துவ மனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக் கின்றது புதிய பிரச்னைகள்...

ஆணுக்கும் பெண்ணுக்கும்... 

குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதலில் பரிசோதனை மேற் கொள்வது என்பதில் கணவனு க்கும், மனைவி க்கும் பிரச்னைகள் ஆரம்பி கின்றது.

ஆயினும், சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் பெரும் பாலும் பெண்கள் தான் தங்களை பரிசோத னைக்கு முதலில் உட்படுத்திக் கொள்கிறா ர்கள்.

ஆண்களு க்கான பரிசோத னைகள் மிகவும் சுலபமானது என்றாலும் கூட, அவர்கள் அதை மேற் கொள்ள தயாராக இருப்ப தில்லை.

பெண்ணுக்கு பரிசோதனை மேற் கொண்டு சிகிச் சையைத் தொடங்கும் போதே, அவளது கணவனும் தன்னை பரிசோ தனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம், ஆணோ பெண்ணோ குழந்தை இல்லை என்று வந்து விட்டால் இரண்டு பேருமே பரிசோதனை செய்து கொள்வது தான் நல்லது.

இவர்களில் ஒருவர் மட்டும் பரிசோதனை செய்து கொள்ளவது உசிதமானது அல்ல என்பதை இரு வருமே புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய பிரச்னைகள் தெரிந்து கொள்வ தற்கும், அதற்கு தேவை யான பரிசோத னைகள் மேற் கொள்ள வதற்கும் இரண்டு பேரும் ஒன்றாக செல்வது தான் நல்லது.

ஏனென்றால் இதற்கு தேவையான கவுன்சிலிங் இரண்டு பேருக்கும் தேவை. கவுன்சிலிங் நேரத்தில் கணவன் - மனைவி இரண்டு பேரிடமும் எல்லா விஷயங் களை பற்றியும் ஒன்றாக மருத்து வர்கள் விளக்குவர்.

ஒருவரிடம் மட்டும் சொன்னால், அவர்களுக்கு எதோ கடுமையான கோளாறு இருப்பதாக நினைப்பத ற்கும், சந்தேகப்படு வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

மேலும், தங்களு டைய பிரச்னைகள் உறவினர் களிடையே சொல்வதை தவிர்க்க வேண்டும். அது சில நேரங்களில் கணவனுக்கோ, மனை விக்கோ மனச் சங்கடங் களை உருவாக்க நேரிடலாம்.

மலட்டுத் தன்மைகான காரணங்கள்... 

மாதவிலக்கில் தடைகள், என்டோ மெட்ரியாசிஸ், கருமுட்டை உருவாகு வதிலுள்ள தடைகள், டியூபில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்னைகள் பெண்களின் மலட்டுத் தன்மைக் கான காரணங் களாக இருக்கின்றது.

ஆண்களில் வெரிகோஸ், உயிரணுக் களில் எண்ணிக்கை குறைவாக இருப்பது போன்றவை மலட்டுத் தன்மைக்கு காரணங் களாக இருக்கி ன்றது.

ஒரு வருடம் வரை முயற்சித்த பின்னும் தாய்மை அடையாமல் இருக்கும் போதுதான் நமக்கு மலட்டுத் தன்மை இருக்கலாம் என்று உணர முடிகின்றது.

இதை ஒரு நோயாக கருதி மனதை வாட்டிக் கொள்வது தவறு. இன்று சாதாரண மாக 10-ல் ஒருவரு க்காவது இப்பிர ச்னைகள் இருக்கின்றது.

இதில் முக்கால் வாசி பேர்களும் மாற்று சிகிச்சை முறைகள் இல்லா மலயே குழந்தைகள் பெற்றுக் கொண்டு ள்ளனர்.



ஆனால், சிலருக்கு சிகிச்சை முறைகள் தேவைப் படுகிறது. ஊட்ட சத்து குறைவான உணவு, தண்ணி ரிலும் உணவிலும் அடங்கி உள்ள கிருமிகள், சிகரெட், குடிப் பழக்கம் போன்ற வையும் மலட்டுத் தன்மைக்கு காரணமாக இருக்கின்றது.

சரியான சிகிச்சை முறை... 

கணவன், மனைவி இவர்களில் எவருக்கேனும் மலட்டு த்தன்மை இருந்தால் கூட தாம்பத்ய உறவில் வழக்கம் போல் ஈடுபட வேண்டும்.

இதனால், உயிரணுக் களுடைய சக்தி குறைவதற்கு பதிலாக கூடத்தான் செய்யும். அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்க வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும்.

அது மட்டு மில்லாமல் அவ்விதம் இருக்கின்ற நேரம் தம்பதிகளின் மன ஒற்று மையும் சிராக இருக்கும்.

கருவாக்க சிகிச்சை க்கு ஒரு மருத்து வரை அணுகும் முன், அவர் நடத்து கின்ற அல்லது பணியாற் றுகின்ற மருத்துவ மனையைப் பற்றிய விவரங் களைத் தெரிந்து கொள்ள வேண்டும் .

நவீன கருவிகள் உள்ளதா, சிகிச்சைக்கு வருபவ ர்களை அவர் நன்றாக பராம ரித்து கொள்கி றார்களா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டி யிருக்கும்.

எல்லா பிரச்னைக ளுக்கும் தீர்வு தரும் வசதி கொண்ட மருத்துவ மனையை யும், எல்லோ ராலும் எளிதில் அணுக இயலுகின்ற மருத்து வரையும் அணுகுவது தான் நன்மை பயக்கும்.


சிறந்த மருத்துவரின் ஆலோச னைகளை சரியாக பெற்று சிகிச்சையைப் பெற வேண்டும். மாறாக, கலர் ஃபுல்லான விளம்பர ங்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது.

இந்த எளிய வழிமுறை களைப் பின் பற்றினால், உங்கள் வீட்டிலும் தேவதைகள் வலம் வருவது உறுதி!
Tags: