இந்து மக்கள் கட்சி பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு !

கும்பகோண த்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடி உடைக்கப் பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
இந்து மக்கள் கட்சி பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு !

கார் கண்ணாடி உடைப்பு


கும்பகோணம் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்நகர் குரு மூர்த்தி (வயது37). இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர். இவருக்கு கட்சியின் சார்பில் ஒரு கார் கொடுக்கப் பட்டுள்ளது.
 
கட்சி சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி களை முடித்து விட்டு இரவு நேரத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்துவது வழக்கம் என்று கூறப் படுகிறது.

நேற்று முன்தினம் கடலூர் சென்று விட்டு கும்பகோணம் திரும்பிய குருமூர்த்தி இரவு வழக்கமாக நிறுத்தப் படும் இடத்தில் காரை நிறுத்தி இருந்தார்.

இந்நிலை யில் நேற்று காலை அந்த காரின் பின்புற கண்ணாடி சுத்தியலால் உடைக்கப் பட்டிருந்தது. கண்ணா டியை உடைக்க பயன் படுத்தப் பட்ட சுத்தியல் காரின் உள்புறம் உள்ள சீட்டில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

மேலும் காரின் பின்புறம் உள்ள ஒரு டயர் கத்தியால் குத்தி கிழிக்கப் பட்டிருந் ததும் தெரிய வந்தது.

போலீசார் விசாரணை


இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் ராம்நகர் குருமூர்த்தி புகார் கொடுத்தார். 
 
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பார்வை யிட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: