பேசும் முன் கேளுங்கள்... சிந்தனைக்கு சில !





பேசும் முன் கேளுங்கள்... சிந்தனைக்கு சில !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பேசும் முன் கேளுங்கள்; எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். சில வேளைகளில் இழப்பு தான் பெரிய ஆதாயமாக இருக்கும். 
பேசும் முன் கேளுங்கள்... சிந்தனைக்கு சில !
யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக் கொடுப்ப வரெல்லாம் ஆசிரியர் அல்லர். நாம் மாறும் போது தானும் மாறி, நாம் தலையசைக்கு போது தானும் தலை யசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. 

அதற்கு நம் நிழலே போதும். நோயை விட அச்சமே அதிகம் கொல்லும். நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அது தான் என்னை மனி தனாக்கியது. 
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறோம்! வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 

சமையல் சரியாக அமையா விடில் ஒரு நாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தா விடில் வாழ்நாளே இழப்பு.

பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.  எல்லோரையும் நேசிப்பது சிரமம் தான்; ஆனால் பழகிக் கொள்ளுங்கள். 

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்ல வனாகலாம். காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை. 

விந்தையான சிலரைப் பார்க்கும் போது இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித் தான் என எண்ணிக் கொள்ளுங்கள். 
யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம். ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒரு முறை முடிவெடுங்கள். 
அச்சம் தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம். நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும். 

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்து விடும். உண்மை தனியாகச் செல்லும் பொய்க்குத் தான் துணை வேண்டும். வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும். 

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான். செய்வதற்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும்; அப்போது தான் முன்னேற முடியும். 

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப் படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர். வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற வனாவான். 

தோல்வி ஏற்படுவது, அடுத்தச் செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப் படுத்த முயல வேண்டும். 
பேசும் முன் கேளுங்கள்... சிந்தனைக்கு சில !
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம். ஒன்றைப் பற்றி நிச்சயமாக நம்ப வேண்டு மென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். 
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
Tags: