ஷகிலா பேசுகிறேன்... ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !

ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? 
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட் மெண்டுக்கு சென்றோம்.

ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. 

சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’ யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.
இனி அவரே பேசுவார். ஏன் எழுதினேன்? ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்து தான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. 

உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’ அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. 

நீண்ட காலமாக வே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர் கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந் தார்கள். 

எல்லாரிடமும் எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

என் வாழ்க் கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியா னவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். 
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
எழுதினால் உண்மையை மட்டுமே எழுத வேண்டும். இந்நிலை யில் திடீரென்று ஒரு நாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமள வென்று எழுதி விட்டேன்.

மை டியர் குட்டிச் சாத்தான்’ நான் பிறந்து வளர்ந்த தெல்லாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோமே இதே வீட்டில் தான். 

அப்பா, ரெக்ரி யேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப்.

அப்பாவு க்கும் சரி. அம்மா வுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். 

அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை களை என் சொந்த சகோதர சகோதரிகள் என்று தான் என்னுடைய 12 வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். 

தனியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி?

என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள். அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் 

(இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப் போடு போட்ட ‘மைடியர் குட்டிச் சாத்தான்’ படத்தில் நடித்திரு ந்தார்கள். 

ஆசிரியர்கள், மாண வர்கள் மத்தியில் அவர்க ளுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக் காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தா ர்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது.

ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப் பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். 

இரண்டாயிரம் ஆண்டின் காலக் கட்டத்தில் தான் மலையாளப் படங் களில் நடிக்க ஆரம்பி த்தேன்.

படிப்புக்கு பதில் நடிப்பு
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம் பாக்கம் முழுக்க சுற்றுவேன். 

ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப் பெரிய ஆறுதலாக இருந்தது. 

‘படிப்பு தான் வரலை. நடிப் பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போட வில்லை. அதுவு மின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தது. 

சினிமாவில் நான் நடித் ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.

சிலுக்கு அறைந்தார்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
ப்ளே கேர்ள்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவு க்கு தங்கச்சி யாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டி ங்கில் எனக்கு கொடுக்கப் பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. 

அதிர்ச் சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னை விட மிகச்சிறிய ஆடை அணிந்தி ருந்தார். 

அவரிடம் சங்கட த்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடை யெல்லாம் வெளியே தெரியுது.’ என்றேன். சில்க் என்னை கண்டுக் கொள்ளவே இல்லை. 
இயக்குநர் உடனே,  ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படி யெல்லாம் பேசக் கூடாது...’ என்றார். சீன் படி நான் சில்க் குக்கு காஃபி கொடுக்க வேண்டும். 

அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங் கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமா கவே அறைந்தார். எனக்கு அவமா னமாகி விட்டது. 

நான் அவரிடம் சொன் னதை மனதில் வைத்துக் கொண்டு வன்ம த்தில் அறைந்து விட்டார் என்று கோபப் பட்டு படப் பிடிப்பை விட்டு வெளி யேறினேன்.

தயாரிப் பாளரும், இயக்கு நரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடு த்தார்கள். சில்க் வேண்டு மென்றே அடிக்க வில்லை என்று புரிய வைத் தார்கள்.

அதன் பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யே கமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டி ங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்தி ருப்பார்.

லட்சங்களை சம்பாதித்தேன்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
நான் நடித்த படங்கள் கமர்ஷி யலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வு களுக்கு வடிகாலாக அமைந்தவை. 

பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பா ர்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையை விட பன்மடங்கு வசூல் ஆகும். 

அந்த படம் தொடர் பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்த விதமான குற்றவு ணர்ச்சியோ, வருத்தமோ சிறிது மில்லை.

ஒரு முறை படப் பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டி ருந்தேன். ஒரு புதுத் தயாரிப் பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். 

ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிரா கரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள் தான் நடிக்க முடியும் என்றேன். 
அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான் ஸாகவே கொடுத்து விட்டார். மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். 

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ண யித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போது தான் தெரிய வந்தது.

முதுகில் குத்திய துரோகம்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத் துக்காக தான் சம்பா தித்தேன். 

உறவுகளையும், நட்புக ளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். 

ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகை யாக தான் பார்த்திரு க்கிறார்கள். அவர்களைப் பொறுத் தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. 

என் குடும்ப நிகழ்வு களில் நான் கலந்துக் கொள்வதை கூட அவர்கள் அவமா னமாக கருதி னார்கள்.

எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். 
வெயிலால் வரும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான இயற்கை வைத்தியம் !
நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக் கொண்டே இருந்தார்கள். துரோ கங்கள் பழகி விட்டது. 

எப்படியி ருந்தாலும் நான் வாழ்ந்து தானே ஆக வேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மா னித்தேன். 

இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக் கிறேன்.

எல்லாமே என்னுடைய தேர்வு தான் என்பதால் காசு பணம் இருக்கி றதோ இல்லையோ மகிழ்ச் சியாக வாழ்ந்து வருகிறேன். 

என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத் திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங் கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக் கிறேன். 

அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவு களின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந் தறியாத பாதுகாப் பினையும், மகிழ்ச்சி யையும் பெறுகிறேன்.

காமிக்ஸ் பிடிக்கும்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
இளையரா ஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளை யாடுவது. சினிமா பார்ப்பது அரிது. 

தமிழில் கமல் சார் படங்களை தியேட் டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங் களை விரும்பி ரசிப்பேன். 

மாற்று சினிமா வாக மதிக்கப் படும் உலகப் படங்கள், கொரியப் படங்கள் எனக்கு விருப்ப மானவை. பெரிய கலெக்‌ ஷனே என்னிடம் இருக்கிறது.

காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். 
அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தக ங்களை தான். 

ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும் போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக் ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்து தான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.

பயணங்களின் காதலி

பயணங்கள் தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. 

மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வன விலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுது போக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். 

ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடி யினரின் வீடுகளில் தங்கி, நாட்க ணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். 

இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்து விட்டு வர வேண்டும் என்பது என் லட்சியம்.

ஆண்கள்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறு ப்பார்கள் என்றொரு பொது  ப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ் வாகதான் பார் க்கிறேன். 

துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவ ருக்கும் பொதுவானது தான். 

என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணி டமும் என் அப்பாவை தேடு கிறேன். நான் ஒரு depended child. ஆண் களிடம் எதிர்ப் பார்ப்பது ஆதரவை மட்டுமே. 
வயதில் மூத்த வர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளைய வர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். 

பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பா ர்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?

கடவுளுக்கு கடிதம்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல் லாவோ, இயேசுவோ, கிருஷ் ணரோ அல்ல. கடவுள். அவ்வளவு தான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். 

அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வ தில்லை. கடவுள் என்ப தால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? 
சமீபத்தில் கூட பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள த்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்க ணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். 

கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவு கின்றன. எனக்கும் கடவுளு க்கும் மத்தியில் இடைத்த ரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவ தில்லை.

டைரக்‌ஷன் ஆசை

நடிக்க வாய்ப்பு குறைந்த வுடனேயே டைரக்டர் ஆகி விட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படி யெல்லாம் இல்லை. 

ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியி ருக்கிறேன். டைரக்‌ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.

நிரூபிப்பேன்
ஷகிலா பேசுகிறேன்...  ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை !
நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக் கொண்டு வருகிறேன். 

இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடு க்கிறேன். எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங் களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. 
எனக்குள் இருக்கும் கலையை வெளிப் படுத்த நல்ல வாய்ப்பு கிடைக் குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்க ளுக்கு நிரூபிப்பேன்.
Tags: