வடகிழக்கு பருவமழை யின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் மீண்டும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக 118 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 1918-ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது. இதன் காரணமாக தற்போது 97 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 118 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 105 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு முன், 1985ம் ஆண்டு சென்னையில் அதிகபட்சமாக 97 செ.மீட்டர் மழை பொழிவு இருந்தது.