பச்சை திராட்சை போல் தோற்றம் அளிக்கும் கடல் பாசிகள் !

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக ளான மன்னார் வளைகுடா விலும், பாக்ஜல சந்தியிலும் அரியவகை கடல் பாசிகள், பவளப் பாறைகள் அதிக அளவில் காணப்ப டுகின்றன.
பச்சை திராட்சை போல் தோற்றம் அளிக்கும் கடல் பாசிகள் !
தற்போது, ராமேசுவரம் வடகாடு கடல் பகுதியில் இருந்து தங்கச் சிமடம் வில்லூண்டி தீர்த்த கடற்கரை

வரையிலும் ‘பச்சைத் திராட்சை’ போல் தோற்றம் அளிக்கும் பச்சைப் பாசிகள் அலையில் அடித்து வரப்பட்டு அதிக அளவில் கரை ஒதுங்கி வரு கின்றன.
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறி யதாவது:- சர்காசம்

ராமேசுவரம் கடல் பகுதியில் மட்டும் 10 வகையான கடல் பாசிகள் உள்ளன. பச்சைத் திராட்சைப் பழம் போல் கொத்துக் கொத்தாக கடற் கரையில் ஒதுங்கிக் கிடக்கும் பாசி, சர்காசம் என்று அழைக்க ப்படும்.

இந்த வகை பாசிகள் கடற்பாறை, பவளப் பாறைக ளின் மீது படர்ந்து நிற்கும். அலைகள் வேகமாக அடிக்கும் போது பாறைகளில் இருந்து விடுபட்டு கடல் நீரோட்ட த்தின் போக்கில் கரையில் வந்து ஒதுங்கும். 
இந்த வகை பாசியில் ஒரு வித வேதிப் பொருள் உள்ளது. தோல் தொழிற் சாலைகளு க்கும், துணி பதனிடும் தொழிற் சாலைகளு க்கும் இது பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து என்ன?
மீனவர்கள் இவற்றை சேகரித்து உலர வைத்து தேவைப் படும் கம்பெனிக ளுக்கு அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags: