வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் பாலியல் கல்வி !





வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் பாலியல் கல்வி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
உங்கள் குழந்தைக்கு பாலியல் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத் துக்குச் சொந்தக் காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும்



இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளி விவரங்கள் இவை. உலகிலேயே அதிகமான எண்ணி க்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள்

அதாவது இரண்டில் ஒரு குழந்தை – பாலியல் வன் முறைக் குள்ளாக்கப் படும் நாடு இந்தியா.

இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுக மானவர் களாலேயே நடத்தப் படுகின்றன.

இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப் படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.
இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப் படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப் படுபவர்களில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தை களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

நம் குழந்தை களைக் காத்துக் கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தை களுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!

சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?

முக்கியமான 5 கட்டளைகள்:

மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், சுகாதார பட்டைகள், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு…


இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல் ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள்.

அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள்.

இப்படிப் பட்ட விசயங்களைப் பேசும் போதோ, குழந்தைகளை விசாரிக்கும் போதோ ஒரு குற்ற வாளியை அணுகுவது போல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப்

பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளை யாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தை களுக்குப் பெண் குழந்தை களைப் பற்றியும் பெண் குழந்தை களுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும்.

இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தை களுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்

பெண் குழந்தை களுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் – மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள்.

குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள்.
பிரியாணிக்காக ரூ.40,000 இழந்த சென்னை பெண்ணின் சோக கதை !
பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

எனவே, ஆண் – பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள்.

சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விசயங்க ளிலும் கணவன், மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

ஆண் குழந்தை களுக்குப் பெண் குழந்தை களுக்குக் கற்றுக் கொடுக்கும் எல்லா வேலை களையும் கற்றுக் கொடுங்கள்;

பெண் குழந்தை களுக்கு ஆண் குழந்தை களுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்பு களையும் அளியுங்கள்.

சக நண்பராக குழந்தை களோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள்.

அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை களிடம் பிறப்புறுப்பு பற்றி சகச(ஜ)மாகப் பேசுங்கள்.



கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர் த்துங்கள்.

அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள்.

புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவா க்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் – ஆனால், சொல்ல முடியாதது

என்று நினைக்கும் – விசயங்களைப் புத்தகங் களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விசயத்தை உங்கள் முன் கொண்டு வந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம்,
இயர் போனால் வரும் இன்னல்கள் !
இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தை களோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக் கிறேன்னு சொல்றாம்மா…”

‘‘ஆகா… அவனுக்கு உன்னைப் பிடித்தி ருக்கிறது போல இருக்குடா. உன்கூட நண்பர் இருக்க ஆசைப்பட்டு இருக்கான்.

அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. தொலைக் காட்சி, சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. 

அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து படிப்போம்னு.

ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக் கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏன் அம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருகிறது… ஆண்களுக்கு வளர வில்லை?”

‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும் போது, அந்தக் குழந்தைங் களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத் தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருகிறது.’’

‘‘பலாத்காரம் என்றால் என்னப்பா?”

‘‘கண்ணா, நம்ம உடம்பில் சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது.


அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுவதைத் தான் பலாத்காரம்னு சொல்கின்றோம்.’’

‘‘மாதவிடாய் என்றால் என்னம்மா? அக்காவுக்கு சுகாதார பட்டைகள் எதுக்கு வாங்குறீங்க?”

‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி சிறுநீராக வருகிறதோ, அதே போல,

பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவை யில்லாத ரத்தம் வெளியே வரும்.

அதைத் தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் உடைகளில் பட்டுவிடாது இருக்கத் தான் சுகாதார பட்டைகள் (sanitary pads).’’

‘‘குழந்தை எப்படி அப்பா பிறக்கின்றது?”

‘அப்பாக்கிட்ட ஒரு இரசாயன (chemical) இருக்கும். அது அம்மா வயித்துக்குள் இருக்கும்

இரசாயனத் துடன் சேர்ந்து, குழந்தையாகப் பிறக்கும். ஆகாய விமானம் எப்படிப் பறக்குது?
காதருகே இந்த சிறிய ஓட்டை ஏன்?
அதை முழுதாகச் சொன்னால் உனக்கு இப்போ புரியமாட்டாது … அது போல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்பில வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விசயங்கள்!

நல்ல தொட்டுணர்வு (Good touch) / கெட்ட தொட்டுணர்வு (bad touch)

குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம்,

 எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரிய வையுங்கள். கை குலுக்கலாம் – நல்ல தொட்டுணர்வு.

தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம்,

தோளில் கை போடலாம் – நல்ல தொட்டுணர்வு. தடவக் கூடாது – கெட்ட தொட்டுணர்வு.

மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது.

வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப் பிடிக்கச் சொல்லக் கூடாது.

மடியில் அமர்த்திக் கொண்டு அணைக்கக் கூடாது – கெட்ட தொட்டுணர்வு. அப்படி யார் செய்தாலும் சம்பந்த பட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி,

தனியாக இருக்கும் போது அம்மாவிடம்/ அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.

வீட்டின் அருகிலோ, பள்ளிக் கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள், தெரியா தவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக் கிறார்களா, சைகை மூலம் அழைக் கிறார்களா,



சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக் கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண் காணியுங்கள்.

காதல்

குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்பு தான். பதின் பருவத்தில் காதல் வருவதும் இயல்பு தான். சூசகமாகச் சொல்லுங்கள்…

‘‘வெறும் நட்புதான் என்பார்கள். ஆனாலும், இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. 
முன்னாள் எம்.எல்.ஏ.யின் மாட்டுப் பண்ணை !
இப்படித் தான் அப்பாவுக்கும் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நடந்துச்சு. அப்புறம் பெரிய வனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சு.

படிப்பைக் கவனிப்பா. எதுவாக இருந்தாலும் அது முக்கியம்’’ என்பது போலப் பேசுங்கள்.

சுய இன்பம்

ஆணோ, பெண்ணோ… ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது.

முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தை களுக்கும் சகசமானது. 

பிறப்புறுப்பைத் தேய்த்துக் கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும்

இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தை யின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும்.

ஆனால், விவரம் தெரிந்த பின் பதின் பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள்.


அதே சமயம், தொலைக்காட்சி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விசயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். 

விளையாட்டு உள்ளிட்ட பிற விசயங்களில் ஊக்கு வியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால்,

அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப் படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம்

ஒரு விசயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை.
மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. 

ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள்.


எல்லோருடைய எண்ணங் களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள்.

வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களு க்குத் துணையாக இருப்பீர்கள்;
எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தை களைக் கவனத் திலேயே வைத்திருங்கள்!.
Tags: