இரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் !





இரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தை களின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மை தான்.
கிருமி நாசினி



இதற்குக் காரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீ ருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக் கணக்கான நோய்க்கிருமி களைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினி யாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை இரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச்சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

மேலும் பெண்களின்  கண்ணீர் பற்றிய மேலும் சில தகவல்கள்

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உண்டு

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உள்ளதாக இசுரேலிய வீசு(ஸ்)மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.

பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவ தாகவும், குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது
பெண்களின் கண்ணீர்




ஒரு வகை புரதத்தினை கொண்டுள்ள தாகவும் இது பெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடு வதற்குத் தூண்டு வதாகவும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சி அற்றவர் களாக உணர வைத்த தாகவும்,

ஆண்களின் இதயத் துடிப்பு வீதம், தோலின் வெப்பம், தெசு(ஸ்) தெசு(ஸ்) தரோன் சுரப்பு வீதம் ஆகிய வற்றைக் குறைத்த தாகவும் அவர்கள் தெரிவிக் கின்றனர்.

பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளான கை (ஹை)ப் போதலமசு(ஸ்), பியுசிபோர்ம் ஜயிரசு(ஸ்) ஆகியவை காம உணர்வின் போது தூண்டப் படுவதாகவும், 

ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப்பகுதி நரம்புகளின் செயற் பாடுகள் குறை வடைந் ததாகவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டி யுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் கண்ணீர் வேசமா இல்லை ஆயுதமா?

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தேவருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுகின்றது என்று கூறுகிறார்கள்.

கண்ணீரை ஆயுதமாகப் பயன் படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியி ருக்கிறார்கள். 

நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித்தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.

ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.

அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங்காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’
பெண்களின் கண்ணீர் வேசமா ஆயுதமா?



’அழுது மிரட்டி இடங்கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.

மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது, எமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். 

ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியா சமானது. பாடசாலை படிக்கும் போது, சக நண்பர் களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது,

‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகி ட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.

சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறை வேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகி க்கிறார்கள். 

முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பெண் புதிதாக வந்திருக்கும் புடவை வாங்கிக் கட்டியிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். 

இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண் களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்கு வதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருது கிறார்களோ தெரிய வில்லை.

கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,

‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்?

நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை கணவன் எப்படி அழகான புடவை வாங்கிக் கொடுத்தி ருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கி றீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவார்கள் பாருங்கள்.

அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். (அனுபவப்பட்ட பெரிய வங்க சொல்லி வேதனைப் பட்ட விடயம்.)
கண்ணீர் ஆயுதம்




இங்கே கணவன் அன் பிற்கு கட்டுப் படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தை களைக் கொட்டு கின்ற போது, கண்ணீ ருக்குக் கட்டுப் படுகின்றாரா? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது.

இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவல கங்களிலும் சரி, பாடசாலை களிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். 

இல்லையேல் இறுதி ஆயுதமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த் தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் மௌனமாகி விடுவார்கள்.

*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.

*பெண்களின் கண் ணீரானது ஆண் களைத்தம் வசப்படுத்தவும் பெண் களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
Tags: