இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும், அழிக்கவும் முடியும் !





இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும், அழிக்கவும் முடியும் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கடந்த சில ஆண்டு களாகவே, மருத்துவ உலகில் ஆராய்ச்சி யாளர்கள் மனிதனின் மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப்பு ஆகிறது என்பதைப் பற்றி தீவரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
 இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும், அழிக்கவும் முடியும் !
சில வாரங்களுக்கு முன்பு ஏறத்தாழ மனிதனின் மூளையில் நினை வுகள் சேமிப்பாகும் செயல் முறைப் பற்றிக் கண்டற ந்தனர்.

இப்போது அதன் அடுத்தக் கட்டமாக, நினைவுகள் சேமிப்பாகும் மாதிரி வடிவங்கள் மற்றும் அதன் பின்ன ணியில் இருக்கும் கணிதக் கோட் பாடுகள் குறித்தும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டு ப்பிடித்து ள்ளனர். 

இதன் மூலமாக, இனி வரும் நாட்களில் ஓர் மனிதனின் நினை வுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், ஏன் மாற்றவும் முடியும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகி ன்றனர்.

மனித மூளை இயக்கத்தின் பின்ன ணியில் இருக்கும், நினை வுகளின் சேமிப்பு மற்றும் இழப்புக் குறித்த கணிதக் கோட் பாட்டை ஆராய்சி யாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

இந்த கணிதக் கோட் பாட்டின் மூலம், இழந்த நினைவு களை மீட்டெடுக்க முடியும் என்றும், இது மிக துல்லிய மாக செயல்படும் என்றும் கூறப்பட்டி ருக்கிறது.

இதன் மூலம் மருத்து வர்கள், ஓர் மனிதனின் மூளையில் தேங்கியி ருக்கும் எந்த ஒரு தகவ லையும் அழிக்க முடியும், மாற்ற முடியும். இது மிகவும் அதிர்ச்சி கரமானது.

சுவிட்சர் லாந்தை சேர்ந்த எக்கோல் பாலிடெக்னிக் ஃபெடெரல் டே லௌசேன்னே (Ecole Polytechnique Federale de Lausanne - EPFL) எனும் ஆராய்ச்சி மையம் தான் வெற்றி கரமாக இந்த ஆராய்ச் சியை செய்து முடித் துள்ளது.
இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும், அழிக்கவும் முடியும் !
ஆராய்ச்சி யின் போது இவர்கள், மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப் பாகிறது என்றும். சேமிப்பு ஆகும் முறையான, மூளையில் நினைகளை உருவாக்கும் சிறப்பு இணைப்புகளான இணை வளைவுகள் குறித்தும் கண்டறிந் துள்ளனர்.

நமது மூளையில் நியூரான் களில் இருந்து உருவாகும் ஓர் சிறப்பு இணைப் பான் இணை வளைவு களினால் தான் நினைவுகள் சேமிக்கப் படுகின்றன.

இந்த ஆராய்ச்சி யின் முடிவில், ஆராய்ச்சி யாளர்கள் ஓர் கணிதக் கோட்பாடு (complex algorithm) வழி முறையைக் கண்டறிந் துள்ளனர். 

இதன் மூலமாக தான், இழந்த நினைவு களை மீட்டெடு க்கவும், இருக்கும் நினைவு களை அழிக்கவும், மாற்றவும் முடியும் என்கி ன்றனர்.

பாரீஸ், பிரான்சு நாடுகளில் இந்த முறையை வைத்து தூங்கிய நிலையில் இருந்த எலியின் மூளையில் அதன் தினசரி நடவடிக் கைகளில் மாற்றம் ஏற்படுத்தி யுள்ளனர்.
கூடிய விரைவில் இது மனிதர் களின் இடையே சோதிக்க போவதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறியிருக் கின்றனர். 

இதன் மூலம் ஞாபக மறதியை குணப்படுத்த முடியும் என்ற போதும். இது மனித வாழ்வியலை சீர்குலை க்கவும் நூறு சதவீத வாய்ப்புகள் இருக் கின்றன.
Tags: