திருமணம் செய்து கொள்ள மாட்டேன் நடிகை சுருதிஹாசன் !

திருமணம்  செய்து கொள்ள மாட்டேன் என்று நடிகை   சுருதி ஹாசன்  பரபரப்பு அறிவிப்பு வெளி யிட்டு உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில்  சுருதிஹாசன் முன்னணி நடிகையாக இருக் கிறார்.  
விஜய் ஜோடியாக புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அஜித் ஜோடியாகவும் புது படத்தில் நடிக்கிறார். மூன்று இந்தி படங்களும் கைவசம்  உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தி படங்கள் குவிவதால் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி  குடியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்தார் அப்போது அந்த வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததால் சொந்த வீட்டுக்கு  மாறி உள்ளார்.

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்லார். இதில் கார்த்தி ஜோடியாக சுருதிஹாசன் நடைக்கலாம் என  கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுருதிஹாசனிடம்  உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது.  அதற்கு பதில் அளித்த  அவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. திருமண  வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் போது  நிம்மதியை  இழந்துவிடுவோம் என்றார்.
Tags:
Privacy and cookie settings