அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட நறுமணமுள்ள பொருள் ஏலக்காய் !

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: எலெட்டாரியா (Elettaria), அமோமம் (Amomum).
அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட நறுமணமுள்ள ஏலக்காய் !
இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. 

எலெட்டாரியாவின் காய்கள் இளம் பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

ஏலக்காயின் பயன்கள்: 

உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக) சமையலின் நறுமணமாக ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப் பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப் படுகிறது.
தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு வட இரோப்பாவில் இன்றியமையாத உள்பொருளாக மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய் தான்.

ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும். ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

மருத்துவக் குணங்கள்: 
அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட நறுமணமுள்ள பொருள் ஏலக்காய் !
பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். 

ப‌சியே ஏ‌ற்படுவ‌ தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌ வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். 

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படு பவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர் களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம். வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படு வத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம்.

எனவே வா‌ய் து‌ர் நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. 

இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும்

நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலிய வற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.

ஈரப்பதம் புரதம் மாவுப் பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. 
ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி.
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளை அடித் தொண்டை அழற்சி தொண்டைக் கட்டு உள்நாக்கில் வலி குளிர் காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு 

முதலிய வற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப் பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித் தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

நறுஞ்சுவையும் நறு மணமும் உள்ள மருந்துப் பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்பு களை தூண்டி விடவும் பயன்படுத்து கின்றனர். 

நாம் குறைந்த பட்சம் தேநீர் பாயசம் முதலிய வற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும்.
அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட நறுமணமுள்ள பொருள் ஏலக்காய் !
அதோடு ஜீரணக் கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 

பாலில் சுட வைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இரு பாலருக்கும் குறை பாடுகள் குணமாகும்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த் தூளைச் சேர்த்தால் மலட்டுத் தன்மை ஆண்மைக் குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன் படுத்தினால் போதும். 
ஜீரணமாகாத போது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். சில சமயம் வெங்காயம் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் கொள்பவர் களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். 

இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங் கினாலும் உடல் ஜீரணமாகும்.

இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’ மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். 

நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப் படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேச முடியாதபடி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். 
அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட நறுமணமுள்ள ஏலக்காய் !
இவர்களும் ஏலக்காய் மெல்லலாம். நெல்லிக் காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அரு மருந்தாகும்.

இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும். அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும்.
பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
Tags: