ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?

ஜகாதுல் ஃபித்ர் என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன் பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்த வேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும்.
ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?
ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும். 

எவ்வளவு? எவர்களுக்காக? ‘ரமழானில் இருந்து விடுபடு முகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திர மானவன்,  அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம் களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’

அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்), நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா. 
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும்.

சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர். இந்த அளவு உண வையோ, உணவுத் தானியத்தையோ வழங்க வேண்டும். 

பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்க வேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்க வேண்டும். 

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களும் இருந்தால் தனது மூன்று பிள்ளைகள், 

தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும்.
ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?
எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின்றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.

எப்போது? எதற்காக! ‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், 

அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக் கினார்கள்.

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ, 

அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்க ப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரணமாகும். நோன்பு கடமையான சிறுவர்களு க்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப் பட வேண்டும்.

முதுகு வலி உயிர் போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !

இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தா விட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரண மாகும். 

இது இவர்களுக்கும் பொருந்தும். இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கி விட வேண்டும். இது வழங்கப் பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும்.

பெரு நாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்கு பவராக இப்னு உமர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்). 

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹா பாக்களின் நடை முறையாக இருந்தது என்ற கருத்தைப் பெற முடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர் களுக்கு நாம் வழங்கு பவர்களாக இருந்தோம்.
ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?
நபித் தோழர்கள் பெரு நாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்குபவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி) எனவே, பெரு நாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம்பிக்கலாம்.

எங்கே? எவர்களுக்கு? ‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். 

அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியு ள்ளார்கள்.

சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வரு கின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்த மல்ல. 

சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம்.

அஃதின்றி வெளியூர் களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

எதை வழங்குவது? ‘

ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக் கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது. 

பெரும் பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர்.

இது ஒரு இபாதத் தாக இருப்ப தால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன் வைக்கின்றனர். 

பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக் கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக் கினறனர்.

இமாம் அபூ ஹனீபா அவர்கள் தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். 

ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்க லாம் என்றும் கூறியு ள்ளனர்.

ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்க வேண்டும் எனும் போது, அதன் பெறும தியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.
ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?
இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,

(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத் திலேயே செய்ய வேண்டும்.

(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்ப டுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்தி ஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.

 (3) நபித்தோழர் களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்த போதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். 
பணத்தை வழங்க வில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடை முறையாக வும் திகழ்கின்றது.

(4) நபி (ஸல்) அவர்களும், கலீபா க்களும் உணவு வழங்கிய நடை முறைக்கு இது முரண் பட்டதாகும். 

நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்து விட்டது.

எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.

ஒரு ஆலோசனை: 
ஜக்காத்துல் ஃபித்ர் என்ற பெருநாள் தர்மம் ஏன்? எவ்வளவு?
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ,

வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம்.

புது வீடு கட்டும் போது கரையான் வருவதை‌ தடுப்பது எப்படி?

இது அவசியம் என்பதற் காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர்கள் 

அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல் படுவதற் காகவே இவ்வா லோசனையாகும்.
Tags: