துபாயில் குடியேறியுள்ள முன்னணி நடிகர் அஜித் குமார், எல்லோரிடம் இருந்தும் விலகியிருப்பது ஏன் என்பது உள்பட பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பரபரப்பாக பேசியுள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆட்டோ ஓட்டுநர் !
நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தேன். எனக்கு மூத்த சகோதரர் இருந்தார். என் சிறுவயதிலேயே வீட்டில் சமைக்க கற்றுக் கொடுத்தனர். அந்த வயதிலேயே நான் கிச்சனில் பணியாற்றிய நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.
எல்லோரும் இதை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பொது வாழ்க்கைக்கு வரும் போது, உங்களுக்கு நிறைய கடமைகளும், ஒப்பந்தங்களும் இருக்கும். அதை நிறைவேற்ற உங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். அது நேரத்தை மிச்சப்படுத்தும்.
ஆரம்பத்தில் உங்கள் கைப்பையை தூக்கவும், மற்றவற்றுக்கும் ஓடி வந்து உதவி செய்வார்கள். காலப்போக்கில் உங்களை சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்க தொடங்கி விடுவீர்கள். நானும் அப்படி இருந்திருக்கிறேன். இப்போது அதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.
அதனால் தான் இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி துபாயில் இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் மோட்டார் ஸ்போர்ட்ஸ். இங்கு நிறைய சர்க்கியூட்டுகள் இருக்கின்றன. ஒரு வகையில் அவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?
இங்கு எல்லா விஷயங்களையும் நானே செய்வதை மிகவும் ரசிக்கிறேன். சிறுவயதில் கற்றுக்கொண்ட விஷயங்கள் தற்போது எனக்கு உதவுகின்றன. மற்றவர்கள் உதவி செய்ய காத்திருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால், அது உங்களை பெரிதும் பாழாக்கி விடும்.
நான் நிறைய நேரத்தை அவர்களுக்கு இடையிலான தினசரி சண்டைகளை தீர்த்து வைப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் வீணடித்தேன். எனவே, முடிந்த வரைக்கும் சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். சில நேரங்களில் உதவி இல்லாமல் இருக்க முடியாது.
ஆனால், பல நேரங்களில் நீங்களே சமாளித்துக் கொள்ளலாம். இப்போது நான் எனது முடிவுகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லோரிடம் இருந்தும் விலகி இருக்கிறேன். இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.



Thanks for Your Comments