தரையில் கிடந்த உறுப்பு.. அலங்கோலமாக கிடந்த பெண்.. !

0

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பட்டப்பகலில் நடந்த படு கொடூர கொலை சம்பவம் மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான கல்லூரி மாணவி யாமினி பிரியா, தேர்வு முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது காதல் மறுப்புக்கு பழிவாங்கிய வாலிபர் விக்னேஷ், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றார். 

தரையில் கிடந்த  உறுப்பு.. அலங்கோலமாக  கிடந்த  பெண்.. !
இரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண், இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் 2016-இல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கை நினைவுபடுத்துகிறது.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !

ஹோசகேரஹள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யாமினி பிரியா, தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்குச் சென்ற யாமினி, தேர்வு முடிந்த பிறகு மல்லேஸ்வரம் மந்திரி மால் அருகிலுள்ள ரயில்வே டிராக் வழியாக வீட்டிற்குத் திரும்பினார்.


அப்போதுதான், அவரைத் திடீரென வழிமறித்த வாலிபர் விக்னேஷ், மறைத்து வைத்திருந்த திரவத்தை (சந்தேகத்தின் படி கந்தகம்) யாமினியின் முகத்தில் வீசினார்.வலியால் துடித்த யாமினி கத்திய கூச்சலிட்டபோது, ஈவிரக்கமின்றி விக்னேஷ் கத்தியை எடுத்து அவரது கழுத்தை கரகரவென அறுத்தார். 


மேலும், அவரது முகத்தில் கண்மூடித்தனமாக குத்தியதால், இரத்தத்தில் நனைந்த யாமினி உடல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கழுத்து பகுதி சாலையில் தனியாக கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விக்னேஷைப் பிடிக்க முயன்றபோது, அவர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி தப்பி ஓடினார்.

காதல் மறுப்பும், லவ் டார்ச்சரும்.. போலீஸ் எச்சரிக்கைக்குப் பிறகு பழிவாங்கல்போலீஸ் முதற்கட்ட விசாரணையில், கொலைக்காரரின் பெயர் விக்னேஷ் (23) எனத் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக விக்னேஷ் யாமினியை ஒருதலை காதலித்து வந்தார்.

நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள் !

ஆனால், யாமினிக்கு அவரிடம் எந்த ஈர்ப்பும் இல்லை. மறுப்புக்கு மேலும் விக்னேஷ் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்ததால், தாங்கவோ முடியாமல் யாமினி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 


இதைத் தொடர்ந்து விசாரித்த போலீஸார், விக்னேஷின் வயது 23-ஆக இருப்பதால் வழக்கு பதிவு செய்யாமல், அவருக்கு எச்சரிக்கை வார்த்தைகளுடன் அனுப்பி வைத்தனர்.


இதனால் ஆத்திரம் ததும்பிய விக்னேஷ், எனக்குக் கிடைக்காத யாமினி, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவெடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேர்வு முடிந்து யாமினி வீடு திரும்பும் வழியில் அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்த விக்னேஷ், திட்டமிட்டுக் கொன்றதாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மல்லேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான விக்னேஷைப் பிடிக்க, தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகள், சாட்சி வாக்குமூலங்கள் ஆகியவற்றைப் பொறுத்து விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings