பூர்ணிமா பிக்பாஸில் சம்பாதித்தது எவ்வளவு? தெரியுமா?அம்மாடியோ !

0

டிவி ரசிகர்களிடையே தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள நிகழ்ச்சி, பிக்பாஸ் சீசன் 7. கடந்த அக்டோபர் மாதம் தாெடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. 

பூர்ணிமா பிக்பாஸில் சம்பாதித்தது எவ்வளவு? தெரியுமா?அம்மாடியோ !
இந்த வாரம் பணப்பெட்டி வந்தததை அடுத்து அதை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி வெளியேறி யுள்ளார். பிக்பாஸ் போட்டியில் டிஜிட்டல் உலகில் அதிகம் பிரபலமானவர் களையும் போட்டி யாளர்களாக களமிறக்குவர். 

அந்த வகையில், ஆரத்தி என்ற பெயரில் பிரபலமான பூர்ணிமா ரவியும் இப்போட்டியில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கினார். இவரும், சக போட்டியாளரான மாயாவும் நெருங்கிய தோழிகளாக இந்நிகழ்ச்சியில் வலம் வந்தனர். 

விரைவில் பெண்கள் கர்ப்பமாக இந்த உடற்பயிற்சியை செய்யணுமாம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் மத்தியில் பயங்கர டஃப் கொடுத்த போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பூர்ணிமா ரவி. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 96 நாட்கள் தாக்குப்பிடித்த இவர், இறுதிப்போட்டி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டதை அடுத்து, அதன் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருந்தது. நேற்று, இந்த பணப்பெட்டியில் 16 லட்சம் என தொகை ஏற்றப்பட்டது. 

இந்து, பரிசுத்தொகை என்பதால் இதிலிருந்து 30 சதவிகிதம் வரிக்காக பிடிக்கப்படும். ஆக மொத்தத்தில் பூர்ணிமாவிற்கு 16 லட்சத்தில் சுமார் 13  லட்சம் கையிருப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிக்பாஸில் போட்டி யாளர்களாக உள்ள அனைவருக்குமே, ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற வகையில் குறிப்பிட்ட தொகை ஒன்று வழங்கப்படும். அப்படி, பூர்ணிமாவிற்கும் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. 

இவர், மொத்தமாக 96 நாட்கள் இருந்துள்ளார். இவர், தனக்கு சம்பளமாக வழங்கப்பட்ட தொகை மூலமாக மட்டும், 14 லட்சம் வரை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதிலும், வரிப்பிடித்தம் போக குறிப்பிட்ட தொகை கைக்கு கிடைக்கும். 

இறுதி போட்டிக்குள் நுழைய இருப்பது யார்? 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. பைனல்ஸிற்கு முன்னர் இன்னும் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். 

மேடையில், இரண்டு அல்லது மூன்று பேர் கமலுடன் நிற்பர். அப்படி நிற்கும் மூன்று பேர்களில் அர்ச்சனா, மாயா கண்டிப்பாக இருப்பர் என கூறப்படுகிறது. 
ரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் தெரியுமா? எதனால் வருகிறது?

யார் இந்த பூர்ணிமா ரவி? 

தமிழ்நாட்டில் டப்ஸ் மேஷ் என்ற ஆப் அறிமுகமான போது, அதில் பட டைலாக்குகளுக்கு வாயசைக்க ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட்டவர் பூர்ணிமா ரவி. 

அதன் பிறகு, டப்ஸ் மேஷ் ஆப் மியூசிக்கலி, டிக்டாக் என்ற பெயரில் மெருகேறியது. அவை அனைத்திலும் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். 

இதன் மூலம், இவருக்கு ஒரு பிரபல யூடியூப் சேனலில் வீடியோக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி, பலரிடையே ஆரத்தி என்ற பெயரில் இவர் பிரபலமானார். 

அது தான், தற்போது இவரை பிக்பாஸ் வரை கொண்டு சென்றிருக்கிறது. பிக்பாஸின் பூகம்பம் டாஸ்கின் போது, பூர்ணிமா சென்னையில் வந்து தங்கியிருந்த காலங்களில் தான் சிரமப்பட்ட தருணங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார். 

தொடக்கத்தில் ஒரு வீடு கூட இல்லாமல் சிரமப்பட்ட அவர், தற்போது சென்னையில் சொந்தமாக ஒரு வீடு, கார் என இருப்பதாக பெருமையுடன் கூறினார். 

இவர், 16 லட்சத்துடன் வெளியேறியது நல்ல முடிவு என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings