கணவன் கண்முன் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்... மனைவி அடித்து கொலை !

0

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனிவேல். இவருக்கும், சரஸ்வதிக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

கணவன் கண்முன் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்... மனைவி அடித்து கொலை !
இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பழனிவேல் கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

கணவன் பழனிவேல் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தைக் கொண்டு மனைவி சரஸ்வதி, ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தி நெருக்கமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பழனிவேல் குவைத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று தம்பதி இருவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் பழனிவேல் கண்விழித்துப் பார்த்த போது சரஸ்வதி படுக்கையில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இரவு நேரத்தில் மனைவி எங்கு சென்றிருப்பார் என தெரியாமல் தேடியவர் வீட்டின் அருகே மாட்டுக் கொட்டகைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

மாட்டுக் கொட்டகையில் சரஸ்வதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபடி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

அதனால் ஆத்திரம் தலைக்கேறிய பழனிவேல் சத்தம் போடவே, அங்கிருந்த நபர்கள் தப்பித்து ஓட,  மனைவி சரஸ்வதியை ஓட ஓட விரட்டி தாக்கினார். 

பின்னர் மனைவியை வீட்டிற்கு இழுத்துச் சென்ற பழனிவேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் சரஸ்வதி உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மனைவியை அடித்து கொலை செய்த கணவன் பழனிவேலை போலீஸார் கைது செய்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings