ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் 2 தாலி.. உருகி காதலித்தால் யாருக்கு பிடிக்காது !

0

தமிழ் திரைப்படங்களில் சத்தமாகவும், தட்டையாகவும் பேசும் பாணியில் மிகவும் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கிய நயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். 

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் 2 தாலி.. உருகி காதலித்தால் யாருக்கு பிடிக்காது !
அதன் பிறகு, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லி, தான் நீண்ட நாள் காதலித்து வந்த தமிழ் சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ரெடின் கிங்ஸ்லி - நடிகை சங்கீதா இருவருக்கும் இடையே பலவருடமாக காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் 2 தாலி.. உருகி காதலித்தால் யாருக்கு பிடிக்காது !

விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு விழா நடைபெற இருப்பதாகவும் பல்வேறு சினிமா பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சங்கீதா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் ஒரு பேட்டியில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை, 

ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் அந்த மாங்கல்யமும், சங்கீதா இந்து என்பதால் அந்த மாங்கல்யத்தையும் சங்கீதா கழுத்தில் அணிந்துள்ளார். 

இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் இந்து கோவிலுக்கு சென்ற பின் Church சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

நடிகை சங்கீதா பேட்டி . :

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் 2 தாலி.. உருகி காதலித்தால் யாருக்கு பிடிக்காது !

இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா, அளித்துள்ள பழைய பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு விபத்து தான், என் நண்பர் ஒருவரை டிராப் பண்ணு வதற்காகத் தான் நான் போனேன். 

ஆனால், போன இடத்தில், நீ நடிக்கலாமே என்று கேட்டார்கள். எனக்கு நடிப்பு வராது, ஆனால், கத்துக்கிட்டு நடிக்கிறேன் என்று சொன்னேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி.

என் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனை இருந்தது, வேறு எதாவது செய்யலாம் என்ற எண்ணம் இருந்ததால், நடிக்க வந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். 

ஆனால், அதைவிட பல சினிமாவில் பல கஷ்டத்தை அனுபவித்தேன். முதலில் எனக்கு நடிக்க தெரியாததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். 

நைட் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுவேன். சினிமாவில் நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க, அவங்கள் யார் என்று தெரிந்து கொண்டு, அவர்களை கடந்து செல்வது தான் சவாலாக இருக்கும். 

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் 2 தாலி.. உருகி காதலித்தால் யாருக்கு பிடிக்காது !
அதே போல, சினிமாவில் ஒரு பெண் நல்ல இடத்திற்கு வந்து விட்டால், அவள், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் இந்த இடத்திற்கு வந்தாள் என்று தான் சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கும். 

ஒரு பெண் தன் திறமையால் இந்த இடத்திற்கு வந்தாள் என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. 

என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் என பல விஷயம் நடந்து இருக்கு அதை எல்லாம் கடந்து வந்த இருக்கிறேன். மேலும், எனக்கு 96 திரைப்படம் ரொம்ப பிடிக்கும். 

அதே போல மறுவார்த்தை பேசாதே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், அப்படி ஒருத்தர் உருகி உருகி காதலித்தால் யாருக்குத் தான் பிடிக்காது என்று நடிகை சங்கீதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings