சிவகார்த்திகேயன் இமான் சர்ச்சை.. திடுக்கிடும் திருப்பம் !

0

நடிகர் சிவகார்த்திகேயன் இமான் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பதை இணைய பக்கங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது.

சிவகார்த்திகேயன் இமான் சர்ச்சை.. திடுக்கிடும் திருப்பம் !
இத்தனைக்கும் லியோ திரைப்படம், உலகக்கோப்பை கிரிக்கெட், பிக்பாஸ் என எத்தனையோ பரபரப்பாக பேசப்பட வேண்டிய பல விஷயங்கள் இருந்தும் அதை யெல்லாம் தாண்டி இமான் சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம், இதுவரை இசையமைப்பாளர் இமானோ அல்லது நடிகர் சிவகார்த்திகேயனோ இது போன்ற சிக்கலில் சிக்கியது கிடையாது. இது போன்ற சர்ச்சை வளையத்திற்குள் வந்தது கிடையாது.

வெல்டிங் வேலை... ஒரு நாளைக்கு சம்பளம் 100 ரூபாய்.. குக் வித் கோமாளி புகழ் !

இருவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்ற பிரபலங்கள். இந்நிலையில், இமான் பேசிய ஒரு தகவல் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் அதிர வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்து விட்டார். இனிமேல் அவருடன் சேர்ந்து படம் செய்ய மாட்டேன் இந்த ஜென்மத்தில் அது நடக்காது. 

அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை நீண்ட நாள் கழித்து தான் நான் புரிந்து கொண்டேன்.

நீண்ட நாள் என்றால்… மிக மிக நீண்ட நாட்கள் கழித்து தான் நான் புரிந்து கொண்டேன்.  இந்த விஷயத்தை நான் வெளியே கூறினால் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை அது கடுமையாக பாதிக்கும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், எதன் காரணமாக குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் இமான் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, இந்த விஷயத்தை பகிர்ந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் கூறியதுடன் இன்னும் சில விஷயங்களை இமான் கூறினார். அது பெரிதாக பேசப்படவில்லை.

அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் துரோகத்தை கூறினால் அதனை புரிந்து கொள்ளும் அளவுக்கு என்னுடைய குழந்தைகளுக்கு வயது போதாது.. 

ஒருவேளை அவர்களுக்கு அது குறித்த புரிதல் வந்து இந்த விஷயத்தை சரியாக அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்தால் நானே இந்த விஷயத்தை வெளியில் கூறுவேன்.

அதில் எந்த தயக்கமும் எனக்கு கிடையாது. என் குழந்தைகள் இப்போது தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையும் அவர் அந்த பேட்டியிலேயே பதிவு செய்திருக்கிறாரே.. 

நீருக்கு அடியில் திருமணம் செய்த சென்னை தம்பதிகள் !

ஒரு வேளை, இமான் அந்த விஷயத்தை வெளிப்படையாக கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால்.. அப்பா என்ன கூறுகிறார்..? என்று அவருடைய குழந்தைகள் தேட ஆரம்பித்து 

அது அவர்களுடைய வாழ்க்கைக்கு தவறான வழிகாட்டுதலாக அமைந்து விட்டால் என்ன நடக்கும்..? என்பது தான் இமானுடைய பயமே தவிர.. வேறு எந்த பயமும் இமானுக்கு கிடையாது.

சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை கூறினால் அதனை புரிந்து கொள்ளும் வயதோ, புரிதலோ தன்னுடைய குழந்தைகளுக்கு இல்லை என்பதால் தான் இமான் அமைதி காத்து வருகிறார் என்று கூறியுள்ளார் பத்திரிகையாளர் பாண்டியன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings