விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !

0

உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையிலும், உலக நாடுகள் வியக்கும் வகையிலும் நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளி ஆராய்ச்சியில் கலக்கி வருகிறது. 

விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !
அதற்குச் சான்று நிலவின் தென் துருவத்தில் முதன் முதலாக நாம் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளதே. குறைந்த செலவில் இந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்து இந்தியாவிற்கு நமது இஸ்ரோ பெருமை தேடித் தந்தது. 

நாடே இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த நிலையில், சந்திராயன் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேலை நமது தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். 

சந்திராயன் 3 திட்டத்திற்கு மட்டுமல்ல, சந்திராயன் 1, சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர்களாகவும் தமிழர்கள் இருந்தது நாம் அறிந்ததே.

நிலவின் தென் துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 23 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 

தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் SEPTEMBER 02, 2023 காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம், நூடுல்ஸ் மீன்களில் இருந்து தயாரிக்கப் படுகிறது !

இந்த 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றுகிறார்.  

உலகமே மிகுந்த ஆவலில் காத்துக் கொண்டிருக்கும் இந்த திட்டம் வெற்றி பெற பிரார்த்தனை களையும், இந்த மிகப்பெரிய திட்டத்தின் திட்ட இயக்குனராக இருக்கும் நமது தமிழகத்தை சேர்ந்த வீர பெண்மணிக்கும் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் நாம் தெரிவித்துக் கொள்ளலாம். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சேக் மீரான், சைத்தூன் பீவி தம்பதியின் இரண்டாவது மகளாக பிறந்தவர் தான் நிகர் ஷாஜி. இவரது இயற்பெயர் நிகர் சுல்தான்.

எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978- 79ல் தனது 10ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்த நிகர் ஷாஜி, அப்போதே மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !

அதே போல் 12 ஆம் வகுப்பிலும் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

சாதனையுடன் தனது பள்ளி படிப்பை முடித்த அவர், அதன் பின் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்துள்ளார்.

தனது மேல் படிப்பை முடித்த ஷாஜி பின்னர் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். 

தற்போது, பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்கள் சேர்க்கை முடிந்த பிறகு விடுபட முடியாததற்கு காரணம் !

தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் ஷாஜி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். 

நிகர் சாட்சியின் கணவரான ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் முகமது தாரிக் நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். 

மகள் தர்ஷினி பெங்களூருவில் மருத்துவம் பயின்று வருகிறார். அவருடன் அவரது தாய் சைத்தூன் பீவி பெங்களூரில் வசித்து வருகிறார்.

விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்... சூரியன் ஆய்விலும் தமிழர் !

இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணன் பேராசிரியராகிய ஷேக்சலீம் என்பவர் கூறும் போது, எனது தங்கை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது எனக்கும், 

எனது குடும்பத்திற்கும் நான் வாழும் செங்கோட்டை நகரத்திற்கும் மிகவும் பெருமையான தருணம் எனவும், இது நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?

அதே போல், அவர் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவிக்கும் போது, தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயின்ற பள்ளி மாணவி, இன்று உலகமே போற்றும் வகையில் 

ஒரு செயற்கைக்கோளுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது இந்த தருணத்தில் எனது பள்ளிக்கும், தமிழக பள்ளி கல்வித்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings