தாய் உல்லாசம்.. பார்த்த மகனுக்கு கொடூரம்.. அதிர்ச்சி !

0

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் இவருக்கு ஜோதி ரத்தோர் என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் இருந்தனர். 

தாய் உல்லாசம்.. பார்த்த மகனுக்கு கொடூரம்.. அதிர்ச்சி !
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி சிறுவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக ஜோதி அனைவரிடமும் கூறியுள்ளார். 

தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டான். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு சிறுவனது மரணம் கொலை என்பதும், தாயே அவரை கொலை செய்த அதிர்ச்சித் தகவலும் வெளி வந்துள்ளது. 

போலீஸாக தியான் சிங் பணிக்கு சென்ற நேரத்தில் ஜோதிக்கு பக்கத்து வீட்டுக்காரரான உதய் இண்டௌலியா என்பவருடன் நட்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது கள்ளக் காதலாக மாறியது. 

குடைமிளகாய் சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்?

தியான் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் தியான் சிங்கிற்கு கடைசி வரை தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தியான் சிங் பிளாஸ்டிக் கடை ஒன்றை திறந்தார். அந்த விழாவுக்கு உதய் இண்டாலியா உள்பட உறவினர்கள், நண்பர்கள் பலரையும் அழைத்துள்ளார். 

அனைவரும் விழாவில் பிஸியாக இருந்த நேரம் ஜோதியும் விஜய்யும் மொட்டை மாடியிலுள்ள அறைக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அம்மாவை தேடி அவரது 3 வயது மகனும் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். 

அப்போது, ஜோதியும் உதய்யும் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து விட்டான். 

இதனால் எங்கே தனது கள்ளக் காதல் விஷயத்தை கணவரிடம் சொல்லி விடுவானோ என்று பயந்த ஜோதி, பெற்ற மகன் என்றும் பாராமல் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். 

தாய் உல்லாசம்.. பார்த்த மகனுக்கு கொடூரம்.. அதிர்ச்சி !

இதில், சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்தான். அனைவரும் சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவே நம்பினர்.

மகன் இறந்த பிறகு ஜோதிக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துள்ளன. இதனால் பயந்து போன ஜோதி, தனது கணவரிடம் சென்று மகனை தான் தான் கொன்றதாக ஒப்புக் கொண்டார். 

பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?

ஒரு நிமிடம் ஆடிப்போன தியான் சிங், பின்னர் இது தொடர்பாக போலீஸில் தகவல் தெரிவித்தார். இதனை யடுத்து, ஜோதி மற்றும் உதய் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

தகாத உறவை மறைக்க பிஞ்சு என்று ஊட பாராமல் பெற்ற மகனையே கொன்ற தாயின் கல் நெஞ்சம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings