தாயின் முன் சிறுமி படுகொலை… அதிர்ச்சி பின்னணி தகவல் !

0

மகாராஷ்டிராவின் கல்யாண் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே. 20 வயதாகும் இவர் டீஸ்கான் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

தாயின் முன் சிறுமி படுகொலை… அதிர்ச்சி பின்னணி தகவல் !
இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் சிறுமியை திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் தாயார் இளைஞருடன் வாக்குவாதம் செய்து முடிவில், தனது பெண்ணை திருமணம் முடித்து தர முடியாது என்று கூறி விட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், தாயின் கண் முன்னரே சிறுமியை குத்திப் படுகொலை செய்தார். அடுத்தடுத்து 10க்கும் அதிகமான முறை சிறுமியை இளைஞர் கத்தியால் குத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பா அல்லது பயமா? வித்தியாசம் என்ன?

இந்த சம்பத்தை தொடர்ந்து இளைஞர் காம்ப்ளே ஃபினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக காம்ப்ளே மீது கொல்சேவடி காவல் நிலைய அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 கொலை செய்தல், 309 தற்கொலைக்கு முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings