யார், யாரெல்லாம் வருமான வரி கட்டுவது கிடையாது?

0

வருமான வரி என்பது ஒரு தனிநபரின் வருமானத்தின் மீது செலுத்தப்படும் வரி. இது எந்த வகையான வருமானத்துடன் தொடர்புடையது என்பதைப் பொறுத்து வெவ்வேறு கட்டணங்களில் வசூலிக்கப் படுகிறது. 

யார், யாரெல்லாம் வருமான வரி கட்டுவது கிடையாது?
இந்தியாவில், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் (ஏப்ரல் - மார்ச்) ஆண்டு தோறும் வருமான வரி விதிக்கப் படுகிறது. 

இந்தியாவில் வருமான வரி இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961- இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது.

நீருக்கு அடியில் திருமணம் செய்த சென்னை தம்பதிகள் !

வர்த்தகர்களில் 90% பேர் வருமான வரி கட்டுவ இல்லை. மொத்த வர்த்தகம் செய்பவர்கள் கூட, தங்கள் வருவாயை 30% முதல் 70% வரை குறைத்துக் காட்டி, மீதி உள்ள தொகைக்கே வரி கட்டுகிறார்கள்.

 கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகள் வரி கட்டுவது இல்லை.

தொண்டு நிறுவனங்கள் வரி கட்டுவது தில்லை.

அறக்கட்டளை நடத்துபவர்கள் வரி கட்டுவது இல்லை.

சமூக சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவனங்கள் வரி கட்டுவது இல்லை.

சிறுதொழில்கள் (Small Industries) நடத்துபவர்களில் 10% பேர் கூட வரி கட்டுவ இல்லை. எஞ்சி இருக்கும் 90% பேரும், தங்கள் வருமானத்தை 60%-க்கும் மேல் வருவாயைக் குறைத்துக் கணக்கில் காண்பிக்கிறார்கள்.

மத நிறுவனங்கள் எதுவும் வரி கட்டுவது இல்லை.

அரசியல் கட்சிகள் வரி கட்டுவது இல்லை.

கோடிக் கணக்கில் ஈட்டும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்களும், போட்டிகளை நடத்துபவர்களும் (உதாரணமாக, BCCI) வரி எதுவும் செலுத்துவது இல்லை.

மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) வரி கட்டுவது இல்லை.

தொழிற்சங்கங்கள் வரி கட்டுவது இல்லை.

கலை மற்றும் பண்பாட்டுக் கூடங்கள் மற்றும் இயக்கங்கள் வரி கட்டுவது இல்லை.

தன் மகளுக்காக தாய் செய்யும் தியாகம் வைரல் வீடியோ !

ஊடகங்கள் முதலில் சில வருடங்களுக்கு வரி கட்டுவது தில்லை. பின்னர், தங்கள் வருவாயில் 75%-ஐ மறைத்து, மீதி இருக்கும் வருவாய்க்குத் தான் வரி கட்டுகிறார்கள்.

சுயமாகத் தொழில் நடத்தும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிர்வாக ஆலோசகர்கள், கணக்குப் பட்டயதாரர்கள், பொறியாளர்கள், அழகுக் கலை நிபுணர்கள் முதலியோர் வரி கட்டுவது இல்லை. 

அல்லது வருவாயைக் குறைத்துக் காண்பிப்பதன் மூலம் தாங்கள் கட்ட வேண்டிய வரியில் 25% கூடக் கட்டுவது இல்லை.

பொருட்காட்சிகள் நடத்துவோர் வரி செலுத்துவது இல்லை.

இவர்கள் எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் (not Gross Receipts) மேல் நாணயமாக வரி கட்டினால், அரசுக்கு இப்போது கிடைக்கும் வரி வருவாயைப் போல 100 மடங்கு கிடைக்கும்.

'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல, மாதச் சம்பளம் வாங்கிப் பிழைப்பவன் தான் ஒழுங்காக வரி கட்டுகிறான். 

வளரும் குழந்தைகளுக்கு முட்டை சென்னா செய்வது எப்படி?

ஏனென்றால், வருமான வரி பிடித்தம் செய்தது போக, மிச்சத் தொகை தானே அவன் கைக்குக் கிடைக்கிறது?

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings