இந்தோனேசியாவுக்கு Honey moon சென்ற சேர்ந்த தம்பதி பலி?

0

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந் துள்ளனர்.

இந்தோனேசியாவுக்கு Honey moon சென்ற சேர்ந்த தம்பதி பலி?
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த ஜூன் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து தேனிலவுக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் இருவரும் சென்ற போது போட்டோஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் இருவரும் நீரில் மூழ்கினர். அவர்களை மீட்கும் முயற்சியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர். 

ஆனால், லோகேஸ்வரன் - விபூஷ்னி இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், இருவரது சடலங்களை இந்தியாவுக்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா?

காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய இவர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings