ரசிகர்கள் செயலால் கோபித்துக் கொண்ட நடிகர். நடந்தது என்ன?

0

டிகர் ஆர்யா இப்போது காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருக்கிறார். அதன் புரோமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் ஆர்யா பங்கேற்று வருகிறார்.

ரசிகர்கள் செயலால் கோபித்துக் கொண்ட நடிகர். நடந்தது என்ன?

அவருடன் நடிகை சித்தி இத்னானியும் பங்கேற்று வருகிறார். அண்மையில் சேலம் பகுதியில் உள்ள மால் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்யாவை பார்க்க ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர்.

பின் நிகழ்ச்சியில் ஆர்யா பேசிக்கொண்டிருந்த நிலையில், அதிகம் பேர் செல்பி எடுக்க முற்பட்டனர். இதன் காரணமாக அங்கு நெரிசல் ஏற்பட்டது. 

இதனிடையே பாதுகாக்பை மீறி பலரும் மேடையில் ஏறியதால் கோபமடைந்த ஆர்யா அங்கு இருந்து வெளியேறி விட்டார். அதன்பிறகு ஆர்யா மீண்டும் வருவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)