பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

0

உலக வரலாற்றில் கொடுங்கோலர்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் ஹிட்லர், இடியமின், முசோலினி, செங்கிஸ்க்கான் போன்ற சிலர் மட்டுமே. 

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

ஆனால் இவர்களை விடவும் அவர்களை விட அதிக கொடுமைகள் புரிந்த பல கொடுங்கோலர்களும் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றனர். 

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 

ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களும் பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

பணம் இருந்தால் என்ன வேண்டு மென்றாலும் செய்யலாம் என்பது இப்பொழுது மட்டுமல்ல கடந்த காலத்திலும் இருந்திருக்கிறது. 

வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

650 இளம் பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த ஒரு அரக்க பெண்ணை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறீர்கள்.

இளம் பெண்களை கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்து வந்தால் என்றென்றும் இளமையாகவே இருக்கலாம்.

இதை நம்பி, 650க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த எலிசபெத் பத்தோரி என்பவர், உலகிலேயே அதிக கொலை செய்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

16 ஆம் நூற்றாண்டுகளில் ஹங்கேரியில், செல்வ வளம் மிகுந்த பணக்கார குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தாள்.

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

யாரேனும் குற்றம் செய்தால் ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அந்த குற்றவாளியை, அதனுள் வைத்து தைத்து இரண்டும் இறக்கும் வரை 

பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு தண்டனை அந்த நாட்டில். இது போன்ற பல கொடூரமான சம்பவங்களை கண்டு வளர்கிறாள். 

அப்போதே தன் பணியாளர்களை மிகவும் கொடுமை படுத்துவாள். தனது 15 வயதில் பெரேக் நடாஸ்டி என்பருடன் திருமணம் நடக்கிறது. பணியாளர்களை சித்திரவதை செய்யும் பழக்கம் அங்கும் தொடர்கிறது. 

கணவரும் சில சமயங்களில் இவளுடன் சேர்ந்து சித்திரவதை செய்வாராம். கணவர் பெரும்பாலும் எங்காவது போருக்கு சென்று விட்டால், இவள் தனியாகவே இருப்பாளாம்.

இன்ஜின் சீஸ் ஆவது என்றால் என்ன?

ஒரு நாள் ஒரு பணிப்பெண் இவளுடைய தலைமுடியை திருத்திக் கொண்டிருக்கும் போது சற்று வேகமாக இழுத்து விட்டாள். 

இதனால் ஆத்திரம் அடைந்த பத்தோரி அந்த பெண்ணை, ரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கினாள். இதில் சிறிதளவு ரத்தம் பத்தோரியின் கைகளில் பட்டு விட்டது. 

பிறகு இரவு நேரத்தில், தன் கையில் அந்த பணிப்பெண்ணின் ரத்தம் பட்ட இடம் அழகாகவும் இளமையாகவும் தெரிவதை கவனித்தாள்.

பிறகு தன் வாழ்நாள் முழுவதும் தன் உடல் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இளம் பெண்களை கடத்தி, கொலை செய்ய தொடங்கினாள்.

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

இவளே ஊருக்குள் சென்று பெண்களை கடத்திக் கொண்டு வருவாள். இவளால் ஊருக்குள் சென்று பெண்களை கொண்டு வர முடியாத சமயங்களில் தனது காவலர்களை அனுப்பி பெண்களை கொண்டு வரும் படி உத்தர விடுவாள்.

இதனால் ஊரில் பெண்கள் காணாமல் போக தொடங்கினர். கொலை செய்து ரத்தத்தை எடுப்பது மட்டுமன்றி சில சித்தரவதைக்களும் செய்வாள்.

பெண்களை கூண்டில் அடைத்து வைப்பாள். பின் அவர்களை பனிக்கட்டியில் வீசி, அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசிப்பாள். 

எந்த கிரேடு ஆயில் பயன்படுத்தலாம்?

கைகளில் நெருப்பு வைத்து சுடுதல், நெருப்பு பந்தை பெண்களின் முகத்தில் எறிதல் போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டாள்.

கொதிக்கும் நீரை அவர்கள் மீது ஊற்றி தோலை தனியே பிரித்தெடுப்பாள். பெண்களின் உடலில் தேனை ஊற்றி தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை அவர்களின் மீது விட்டு கடிக்க விட்டு சித்திரவதை செய்வாள்.

பெண்களை இரவு நேரத்தில் கட்டி வைத்து, ஊசியை வைத்து குத்துவது உடலைப் பாகங்களை வெட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளாள். 

இன்னும் பல கொடுமைகள் செய்துள்ளாள். இவளின் இந்த கொடூரங்கள் தெரிந்ததால் மக்கள் யாரும் வேலைக்கு செல்லவே பயந்தனர். சிலர் இவளுக்கு அஞ்சி தன் பெண் பிள்ளைகளை மறைத்து வைக்க தொடங்கினர்.

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

தன் கணவரின் அறிவுரைகளையும் தாண்டி எலிசபெத் தானாகவே பல சித்திரவதை முறைகளை கண்டறிந்தார். 

அவற்றை யெல்லாம் தன் பணிப்பெண்கள் மீது பரிசோதிப்பார். அவரின் பணியாட்கள் யாரும் கோட்டையிலிருந்து தம்பிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப் பட்டிருந்தது. 

மேலும் இரவு நேரத்தில் அவர்கள் அனைவரும் கட்டிவைக்கப்படுவார்கள். 1604 ஆம் ஆண்டு கணவரின் மரணத்திற்கு பிறகு எலிசபெத் மிகவும் மோசமாக மாறினார். 

பெண்களை ஊசியை வைத்து குத்துவது, அவர்களின் மார்பங்களை வெட்டுவது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட தொடங்கினார்.

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து எலிசபெத்தின் கொலைகள் குறித்து ஹங்கேரியின் மன்னருக்கு தெரிய வந்தது. 

இருப்பினும் அவரின் பணபலத்தை நினைத்து அஞ்சிய அரசர் எலிசபெத்தை விசாரிக்க ஒருவரை அரசாங்கம் சார்பாக நியமித்தார். 

எலிசபெத் இப்பொழுது ஒரு விதவையாக இருப்பதால் இப்பொழுது அவருக்கு மரண தண்டனை வழங்கினால் அவரின் செல்வம் யாவும் அரசாங்கத்திற்கு வந்து விடும். 

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

அதை வைத்து அரசாங்கத்தின் கடன்களை அடைந்து விடலாம் என்று எண்ணினார்கள். துர்சோ பத்தோரி என்பவர் எலிசபெத்தை காப்பாற்ற எண்ணினார். 

1610 ஆம் அண்டிற்கு பிறகு துர்சோ என்பவர் பத்தோரிக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். 

கோட்டையை ஆராய்ந்த போது, கண்ணை இழந்த, கை கால்களை இழந்த நிலையில் பல அடையாளம் தெரியாத பெண் சடலங்கள் கண்டறியப்பட்டது.

ஆம்லெட் புளிக்குழம்பு செய்வது எப்படி?

அதன் பின் விசாரணை நடத்தி பத்தோரி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தர விடப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகமல் தன் பணியாளர்களை தனக்கு பதில் குற்றங்களை ஒப்புக் கொண்டு சரணடையும்படி செய்தாள்.

இருப்பினும் இவள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. ஒரு தனிக் கோட்டையில் சிறை வைக்கும் படி ஹங்கேரி அரசு உத்தர விட்டது. அவளுக்கு உதிவிய பணியாளர்களுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது.

அந்த மூடப்பட்ட கோட்டையில் இருந்த பத்தோரி, தனது 54 ஆவது வயதில் உயிரிழந்தாள் என கூறப்படுகிறது. எலிசபெத் செய்த கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளை முழுமையாக கூற இயலாது. 

பெண்களை கொன்று இரத்தத்தில் குளித்த பெண் !

ஏனெனில் அதில் அவ்வளவு கொடூரமும், வக்கிரமும் இருந்தது. அவரின் சித்தரவதைகளில் முக்கியமான ஒன்று நரமாமிசம் தின்னும்படி கைதிகளை கொடுமை செய்தது.

எலிசபெத் மொத்தம் எத்தனை பேரை கொன்றார் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று. அவர் வாழ்ந்த, மணம் முடித்த, மற்றும் சிறை வைக்கப்ட்டு இறந்த கோட்டை இன்றும் ஸ்லோவாக்கியாவில் இருக்கிறது. 

வரலாற்றின் மிகப்பெரிய தொடர் கொலைகாரியான எலிசபெத் பத்தோரியின் வாழ்க்கை அனைவரையும் மிரளவைக்கும் ஒன்றாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings