இப்போது பெண்களுக்கு வாடகை காதலனாகும் வாலிபர்கள் !

0
ஆந்திர மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் குப்தா. பட்டதாரி வாலிபரான இவருக்கு காதலி யாரும் இல்லாததால் தனிமையில் தவித்து வந்து உள்ளார். 
இப்போது பெண்களுக்கு வாடகை காதலனாகும் வாலிபர்கள் !
அப்போது தான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வித்தியாசமான ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 
தன்னைப் போல் காதலன் இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் தனது சேவையை செய்ய முன்வந்தார்.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு வாடகைக்கு பாய் ப்ரெண்ட் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். 

அதில் காதலன் இல்லாமல் தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு தான் சேவை செய்வதாகவும் அதற்காக ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை என கட்டணம் நிர்ணயித்து பதிவிட்டார்.
 
கட்டணம் செலுத்தும் பெண்களுடன் அரட்டை அடிப்பது, சமையல் செய்வது, பார்க் பீச் என பெண்கள் விரும்பும் சேவையை செய்வதாக தெரிவித்து இருந்தார். 

பெண்களுடன் பழகுவதற்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா வரை கட்டணமாக வசூலித்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் சாகுல் குப்தா இதுவரை 50 பெண்களுக்கு சேவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
காதலன் இல்லாமல் தனிமையில் தவிக்கும் பெண்களின் தனிமையை போக்க இந்த சேவையை செய்து வருவதாகவும், காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால் காதலன், காதலி இல்லாதவர்கள் எப்படி எல்லாம் தவிப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் வாடகைக்கு காதலன் என்று சமூக வலை தளங்களில் பதிவு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings