மக்கள் குறைகளை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்... தஞ்சை மேயர் !

0
தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளையும், மனுக்களையும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய இணையதள சேவையை மேயர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 
மக்கள் குறைகளை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்... தஞ்சை மேயர் !
இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
 
குப்பைகள் இருந்தாலோ, கழிவுநீர் தேங்கி யிருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப் படங்களுடன் தெரிவித்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும். 
செயலில் பதிவான குறைகளை மேயர் தொடங்கி அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.
இந்த செயலி தமிழகத்திலேயே முதன் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தொடங்கப் பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம். 

மேலும், விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)