வைரலாகும் கடல் சிங்கம் நொடிப்பொழுதில் செய்த செயல் ஒன்று !

0

இணையம் பல விதமான அற்புத நிகழ்வுகளால் ஆக்கிரமித்துள்ளது. அன்றாடம் வியக்கதக்க பல நிகழ்வுகள் இணையத்தில் பதிவேற்றபட்டு நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி விடுகிறது.

வைரலாகும் கடல் சிங்கம் நொடிப்பொழுதில் செய்த செயல் ஒன்று !
கடல்வாழ் உயிரினங்களின் சில அரிய செயல்கள் விரைவில் கவன ஈர்ப்பை பெற்று விடுகிறது. 

அந்த வகையில் தற்போது கடல் சிங்கம் நொடிப்பொழுதில் செய்த செயல் ஒன்று பார்ப்பவர்கள் நெஞ்சை உறையச்செய்துள்ளது.

உடல் சூடு, சரும நோய்... கோடை நோய்களை எதிர்கொள்ள எளிமையான வழி !

கடல் சிங்கங்கள் பொதுவாக நான்கு கால்களில் நடக்கும் திறன் கொண்டவை. இவை குட்டையான, அடர்த்தியான முடிகள், பெரிய மார்பு மற்றும் வயிறை கொண்டுள்ளது. 

இந்த கடல் சிங்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறப்படுகிறது. தற்போதுள்ள இந்த வைரல் வீடியோவானது டுவிட்டரில் விஷியஸ் வீடியோ என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்த பெண் ஒருவர் கடலின் அருகேயுள்ள இருக்கையில் அமர முற்படுகிறார். 

அப்போது அவர் பின்னாலிருந்து வேகமாக வந்த கடல் சிங்கம் நொடிப்பொழுதில் அந்த பெண்ணை கவ்வியிழுத்து கடலுக்குள் சென்றுவிடுகிறது. 

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் !

பின்னர் அருகிலிருந்த ஒருவர் கடலுக்குள் குதித்து அந்த பெண்ணை மீட்டெடுக்க முயல்கிறார்.

மார்ச்-17ம் தேதி டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 

இதனை பார்த்த பலரும் சிரிப்பு எமோஜிகளையும், கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை பற்றியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)