முரண்டு பிடித்த தனுஷை மடக்கிய ரஜினி... நடந்தது என்ன? படிங்க !

0

கடந்த மாதம் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டு மொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

முரண்டு பிடித்த தனுஷை மடக்கிய ரஜினி... நடந்தது என்ன? படிங்க !
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்து விட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். 

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க துடித்துக் கொண்டிருப்பது ரஜினி தான். நீங்கள் இருவரும் மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழ வேண்டும். 
பேஸ்மேக்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

பிள்ளைகளை விட உங்களுக்கு உங்களின் சந்தோஷம் ரொம்ப முக்கியமாக போய் விட்டதா என்று கூறி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

முதலில் முரண்டு பிடித்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது ரஜினியின் வழிக்கு வந்து விட்டார்களாம். 

இரு மகன்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழ்கிறோம் என்று இருவரும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் தான், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவெடுத்தார்களாம். 

ஹீமோ குளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி !
அப்போது, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுமாறு கூறி சேர்த்து வைத்தாராம் ரஜினி. ஆனால், தற்போதும், மகன்களை காரணம் காட்டி தனுஷ், ஐஸ்வர்யாவின் மனதை மாற்றியுள்ளாராம் ரஜினி.

ஆனால், இவர்கள் இருவரும் மீண்டும் சேர ஒப்புக் கொண்டாலும், அது நிரந்தரமான முடிவு கிடையாது என்று சொல்லப்படுகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)