யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல... நடிகை கீர்த்தி பாண்டியன் !

0

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் 2019-ம் ஆண்டு தும்பா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். 

யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல...  நடிகை கீர்த்தி பாண்டியன்  !

தற்போது தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

மேலும் கீர்த்தி பாண்டியன் தற்போது கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

கருவாடுகளின் மருத்துவப் பலன்கள் மற்றும் பாதகங்கள் பற்றி தெரிந்து கொள்ள ! 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சுட்டுரைப் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

மேலும் புகைப்படங்களுடன் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி கடலில் விழுந்தால், அவளுக்கு நீச்சல் தெரியா விட்டாலும் தப்பித்துக் கொள்வாள். 

யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல...  நடிகை கீர்த்தி பாண்டியன்  !

எப்படி தெரியுமா ? அவள் குச்சி. அதனால் அவள் கடலில் மிதந்து, தப்பித்து விடுவாள். 

நான் பள்ளிக்கு செல்லும் போது எல்லாம் இந்த நகைச்சுவையை என்னைப் பார்த்து சொல்வார்கள். 

நான் வெளியே அதனை ரசிப்பது போல் காட்டிக் கொள்வேன். ஆனால் உண்மையில் என்னை அது மிகக் கடுமையாக தாக்கும்.

எனக்கு இன்னும் அந்த நாள் நியாபகம் இருக்கிறது. நான் பதின் பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் போது நிகழ்ந்தது அந்த சம்பவம். 

மார்க்கெட்டில் கண்களைக் கவரும் கேரட் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

நான் நிஜத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தேன். தூங்கும் போது அழுதேன். 

அதன் பிறகு பல வருடங்களாக நான் குடும்பத்துடன், நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது, 

நான் நடிப்புத் துறைக்கு வந்த போது, இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து எதிர் கொண்டேன்.

நான் எடை அதிகரிக்க முடிவு செய்து முயற்சித்தேன். அதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கினேன். 

யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல...  நடிகை கீர்த்தி பாண்டியன்  !

நம் மனதால் ஒரு விஷயத்தை முழுமையாக நம்பி செயலாற்றினால் எதையும் சாதிக்கலாம் என்று உணரத் துவங்கினேன்.

6 மாதங்களாக கடினமான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறேன். 

ஒவ்வொரு 100 கிராம் எடை அதிகரிப்பதும் எனக்கு மிகப் பெரிய வெற்றி மாதிரி. நான் எனக்காவே இதனை செய்தேன். 

எந்த பொருட்களை உணவில் சேர்த்தால் நல்ல தூக்கம் வரும் ! 

வேறு யாரையும் திருப்திபடுத்தவற்காக அல்ல. நான் என்னை முன்பை விட மிகவும் நேசிக்கிறேன். 

இனியும் நான் எந்த எடையில், வண்ணத்தில் இருந்தாலும் என்னை நான் நேசிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)