மலேசியாவில் போதை பொருள் கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க கோரிக்கை விடுத்த பெற்றோர் !

0

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன், முத்து தம்பதியர் கண்ணன் கூலி வேலை பார்த்து வருகிறார். 

மலேசியாவில் போதை பொருள் கும்பலிடம் சிக்கிய மகனை மீட்க கோரிக்கை விடுத்த பெற்றோர் !
இவர்களுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரத்குமார் கோவையில் உள்ள 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணமாகியுள்ளது.

தோல்வியை எவ்வாறு கையாள்வது... அப்துல் கலாம் !

கடைசி மகனான ஆனந்த் தொழிற் கல்வி முடித்து இங்கேயே கிடைத்த வேலைகளை பார்த்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக 

அதே முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மூலமாக காரைக்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்கிற ஏஜெண்ட் மூலமாக 

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி கோவில் கட்டுமான பணிக்கென மலேசிய நாட்டிற்கு சென்றுள்ளார்.

மூன்று மாதம் வரை குடும்ப தொடர்பில் இருந்த ஆனந்த் பின்னர் தொடர்பற்ற நிலையில் இருந்துள்ளார். 

தோள் பட்டைகள் வலுப்பெற லோலாசனம் | Lolasanam !

பின்னர் அவரது சகோதரர் விசாரித்ததில் ஆனந்த் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆனந்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திடம் 

முறையிட்ட நிலையில் அவர்கள் காவல் பாதுகாப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலாது என பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளி நாட்டில் இருந்து திரும்பிய நபர்கள் மூலம் கடிதம் மற்றும் வீடியோ பதிவை ஆனந்த் அனுப்பியுள்ளார். 

அதில் அவரது சகோதரரான சரத்குமாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகுந்த துயரத்தில் உள்ளதாகவும் தான் உயிரோடு வந்தால் மகிழ்ச்சிகொள் என்றும் 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட !

உடலாக வந்தால் பெரும் மகிழ்ச்சி கொள் என்கிற மனதை உலுக்கும் வார்த்தைகளுடன் கடிதம் எழுதியுள்ளார். 

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் கண்ணீர் மல்க தனது மகனை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)