தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் நடிகர் செந்தில் !

0

தமிழ் சினிமாவில் ரசிகர்காளல் மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர் என்றால் செந்தில் அவர்கள் தான். 

தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் நடிகர் செந்தில் !
இவரும் கவுண்டமணி  அவர்களும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இப்போதும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. 

ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.

முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். 

பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இது அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. 

சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். 

அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. 

இவர் பல் மருத்துவர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு, ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் நடிகர் செந்தில் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமமுகவில் இணைந்தார்.அங்கு, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

2020 ஆம் ஆண்டு அமமுகவில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.11 மார்ச் 2021 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

செந்தில் அவ்வப்போது சில படங்கள் நடித்தும் வருகிறார், இப்போது செந்தில் அவர்கள் தனது மகன், பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம செந்தில் அவர்களின் பேத்திகளா இவர்கள் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)