சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்த சீலிங் பேன்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !

0

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஆபத்தான கட்டத்தில் இருந்து தப்பி பிளைத்திருப்போம். தனியாக இருக்கும் நாட்களில் அவை குறித்து சிந்தித்ததும் உண்டு. 

சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர் மேல் விழுந்த சீலிங் பேன்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !
குறைந்த பட்சம் திரைப்படங்களில் ஆபத்தான சூழலில் அனைவரும் தாறுமாறாக நடந்து கொள்வார்கள், ஓடுவார்கள். 

ஆனால் உண்மையில், ஒரு சிக்கலான சூழ்நிலையில் மனிதர்கள் உறைந்து போய், எதுவும் செய்யாமல் திகைத்து நிற்பார்கள்.

அந்த வகையில் வியட்நாம் நாட்டில் ஒரு குடும்பத்திற்கே ஆபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டமாக அது தப்பி இருக்கிறது. 

வியட்நாம் நாட்டின் பேக் நின்ஹ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் 6 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

குடும்ப பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் உணவு அருந்தினர். அப்போது திடீரென சீலிங் பேன் ஒன்று அவர்கள் நடுவே விழுந்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

தண்டவாளம் இல்லாமல் வெள்ளை கோடுகளை பின்பற்றி செல்லும் உலகின் முதல் ரயில் !

வைரல் ஹாக் என்ற பிரபலமான யூடியூப் சேனில் இந்த வீடியோ வெளியாகியிருந்தது. இந்த வீடியோவில் 6 பேர் வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர் மேல் விழுந்த சீலிங் பேன்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !

அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் மேலே இருந்த பேன் தவறி அவர்களுக்கிடையே விழுந்தது. நல்ல வேளையாக யாருக்கும் இதில் அடிபடவில்லை. 

இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் திகைத்தனர். பேன் விழுவதற்கு முன்பாக 6 பேரில் சிறுவன் ஒருவன் மட்டும் மேலேயே பார்த்த வண்ணம் இருந்தான். 

நடு ராத்திரியில பெட்ரூம் கதவை தட்டிய இன்ஸு... சீரழிந்த நடிகை நடந்தது என்ன?

இதனால் பேன் விழப்போவதை முன்கூட்டியே அறிந்தும் அதனை குடும்பத்தினரிடம் சிறுவன் கூறவில்லை எனவும் கருத முடிகிறது. 

மேலும் அந்த பேன் ஒருவர் மீதும் விழாமல் இறக்கை அவர்களுக்கு இடையே விழுந்ததால் அனைவரும் காயமின்றி தப்பினர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)