பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?

0
கார்ப்பரேட் நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர் கிருபா பாபு. எப்போதும், வேலை வேலை என மும்முரமாகப் பணியாற்றியவர். 
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
தன்னுடைய உடலில் வேகம் குறைந்தி ருப்பதை உணர்ந்தார். தொடக்கத்தில் வயது அதிகரிப்ப தால் ஏற்படும் பிரச்னை என்று சாதாரணமாக விட்டு விட்டார். 

ஆனால், நாளாக ஆக உடலின் இயக்கம் மிகவும் மோசம் அடைந்தது. காரில் இருந்து இறங்கும் போது கூட, முன்பை விட அதிக நேரம் தேவைப் பட்டது.  சில நாட்களுக்குப் பின், வலது தோள் பட்டையில் மிகவும் இறுக்கமாக உணர்ந்தார். 
2008-ம் ஆண்டு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்த போது, அவருக்கு பார்க்கின்சன் நோய் (நடுக்கு வாதம்) இருப்பது தெரிய வந்தது. 

`பார்க்கின்சன் நோயை, மாத்திரைகள் மூலமாகவே குணப்படுத்தி விடலாம்’ என மருத்துவர் தெரிவிக்க, 2015-ம் ஆண்டு வரை மாத்திரைகள் உட்கொண்டு வந்திருக் கிறார். 
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
அதனால் எந்தப் பயனும் இல்லை. இதற்கு சிகிச்சையே இல்லையா எனத் தேடும் போது,  சென்னை யில் ஒரு மருத்துவ மனையில் இதற்கு சிகிச்சை இருப்பதைக் கண்டறிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை வந்தார்.
சென்னை வரும் போதே அவரது உடலின் இயக்கம் மிகக் கடுமை யாகக் குறைந்து விட்டது.  கழிப்பறை க்குச் செல்வதற்குக் கூட அடுத்தவரின் உதவி தேவைப் பட்டது. அவரால் சுயமாக எந்த வேலையை யுமே செய்ய முடிய வில்லை. 

இதனால், கண்டிப்பாக உடனே சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற நிலை. அவருக்கு ஆழ் மூளைத் தூண்டல் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.  

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

தற்போது, மற்றவர் களைப் போல தன்னுடைய வேலையைத் தானே செய்யும் அளவுக்கு நிலைமை யில் முன்னேற்றம்.
நரம்பு மண்டல அறுவை சிகிச்சை
இது குறித்து மூளை, நரம்பு மண்டல அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவர் ஹல்பிரசாந்த் கூறுகை யில்,  

ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பயன்படுத்தப் படுகிறதோ, அதே போன்று மூளைக்குப் பொருத்துவது தான் ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை (Deep brain stimulation (DBS)). 

கிருபா பாபுவுக்கு மாத்திரைகள் எந்தப் பலனையும் அளிக்காத தால், 2015-ம் ஆண்டு, அவர் எங்களைச் சந்தித்தார். சிகிச்சை முறை குறித்து, அவருக்கு விளக்கினோம். மூளைக்குள் மின்முனை செலுத்தப்படுவதால்,  முதலில் அவரது மனைவி சிகிச்சைக்குத் தயங்கினார். 

தீபாவளி பலகாரம் தட்டை முறுக்கு செய்வது எப்படி?

பின், கிருபா பாபுவின் நிலையைக் கண்டு சிகிச்சைக்குச் சம்மதித்தார்.
பேஸ்மேக்கர் கருவி
சிகிச்சை யின் போது, முதலில், சி.டி ஸ்கேன் செய்து, தலைக்கும், சப் தாலமஸ் க்கும் உள்ள தூரத்தை அளவிட்டோம்.  பின்னர், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக, கிருபா பாபுவின் மூளையில், மின் முனை பொருத்தப்பட உள்ள சப்-தலாமிக் நியூக்ளியஸ் பகுதியைக் கண்டறிந் தோம். 

பின்னர், தலையில் சிறு துளையிட்டு, தலையைச் சுற்றி, ஒரு ஃப்ரேம் (Frame) பொருத்தி, சி.டி ஸ்கேன் மூலமாக, மின் முனையை, சப்- தலாமஸ் பகுதியில் செலுத் தினோம்.  
பின்னர், மின் முனையின் அதிர்வு களைப் பதிவு செய்தோம். அதாவது, கிருபா பாபுவின் கை, கால் அசைவு களையும், கண் விழியின் அசைவு களையும் சோதித்துப் பார்த்தோம்.  
எம்.ஆர்.ஐ ஸ்கேன்
அசைவுகளில் முன்னேற்றம் தெரிந்ததால், மறுபடியும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து, மின் முனை, சரியாக சப்-தலாமஸ் பகுதியில் பொருத்தப் பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டோம்.  
இது வரை கண் விழித்துக் கொண்டிருந்த கிருபா பாபுவுக்கு, மயக்க மருந்து அளித்து, வலது புறம் உள்ள காலர் எலும்பின் கீழ்ப்பகுதியில் இருக்கும், சதையின் பின்னால் பேஸ்மேக்கரைப் பொருத்தி, அதை மின் முனையுடன்.  இந்த சிகிச்சை, ஆறு முதல் ஏழு மணி நேரம் நீடித்தது.

இந்த சிகிச்சை முடிந்து, ஏழு முதல் எட்டு மாதங்கள் கிருபா பாபு மாத்திரைகள் உண்டு வந்தார்.  இப்போது, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, மகிழ்ச்சி யுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் பார்க்கின்சன் போன்ற மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்படு கின்றனர்.  

தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

பார்க்கின்சன் என்பது மூளை நரம்பு மண்டலம் சிதைவால் ஏற்படும் நோய். மூளையில் உள்ள டோபமைன் எனும் ரசாயனக் குறை பாட்டால் ஏற்படு கிறது. 
பார்க்கின்சன் நோய் அறிகுறிகள்
இந்த நோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனை முறைகள் ஏதும், இதுவரை உருவாக்கப்பட வில்லை. ஒருவருக்கு, பார்கின்சன் நோய் இருப்பது தெரிய வந்தால், குறைந்தது நான்கு முதல் ஐந்து வருடங்கள் அவருக்கு, மருந்துகள்

மற்றும் மாத்திரைகள் அளித்து குணமாகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். மருந்துகள் மூல மாகவே 60-70 சதவிகித த்தினர்,  இந்த நோயில் இருந்து விடுபடுவர். 

உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி?

மீதம் உள்ள 30 சதவிகிதத் தினருக்குத் தான் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சை முறை மேற்கொள்ளப் படுகிறது.  இதன் மூலம் நோயாளி களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது” என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)