மருத்துவர்களுக்கு சவாலான நரம்புச் சிதைவு நோய் !





மருத்துவர்களுக்கு சவாலான நரம்புச் சிதைவு நோய் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

Guillain Barre Syndrome என்கிற நரம்புச் சிதைவு நோய் மருத்துவர்களுக்கே ஒரு சவாலான ஒன்று.சில வைரஸ் கிருமிகளும் வெகு சில பாக்டீரியா கிருமிகளும் இதற்குக் காரணமாக அறியப்படுகிறது.

மருத்துவர்களுக்கு சவாலான நரம்புச் சிதைவு நோய் !
இது ஒரு Auto immune disease.அதாவது நம் உடலில் உள்ள பாகத்திற்கே எதிர்வினை (Allergy or Immune reaction) நம் உடலிலே ஏற்படுவதால் சில பாகஙகள் செயலிழந்து அதனால் ஏற்படும் நோய்கள் இவ்வகை நோய்கள்.

சாதாரணமாக லேசான சளி, காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு என்று தொடங்கும். 

ஒன்றிரண்டு நாட்களில் கால்களில், பிறகு கைகளில் கடைசியான உடல் பகுதியிலும் சதைகளில் முதலில் விறு விறுவென்று தெரிந்து சதைகளில் தொய்வு ஏற்பட்டு நிற்கவோ நடக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

மருத்துவர்களுக்கு சவாலான நரம்புச் சிதைவு நோய் !

மேற்படி தொந்தரவுகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட வேண்டும். 

சிலருக்கு அந்த எதிர்வினைத் தன்மை குறைவதற்கு இரத்தத்தையே சுத்தம் (Plasmaparesis) செய்ய வேண்டி வரலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். 

தீபாவளி பலகாரம் தட்டை முறுக்கு செய்வது எப்படி?

சிலருக்கு மார்புச் சதைகள் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் கூட தேவைப்படலாம். முடநீக்கியல் பயிற்சி (Physiotherapy) தேவைப்படும். 

நரம்புச் சிதைவு நோய் !

பொதுவாக 14 நாட்கள் முதல் 30 நாட்களில் பெரும்பாலானவர் குணமாகி விடுவர். சிலருக்கு வருடக்கணக்காகி விடும்.

அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன் படுத்த வேண்டி வரும்.சிறுநீர் மலம் கழிக்க உதவி தேவைப்படும்.

உலக நாடுகள் மொத்தத்தையும் அசைத்து பார்த்த புகைப்படம் !

மிக அபூர்வமாகத் தான் உயிருக்கு ஆபத்து வரும். பெரும்பாலானவர்கள் தேறி பழைய நிலைக்கே வந்து விடுவார்கள். இதற்கு இயற்கை மருத்துவம் கிடையாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)