முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன?

0

தண்டுவடத்தின் பணிகள் இரண்டு வகைப்படும். 1. உணர்ச்சி நரம்பின் உந்துதல்களால் ஏற்படும் கிளர்த்தல்ளைக் கடத்துதல், 2 . அனிச்சைச் செயல் 
முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன?
தேகத்தின் பல பாகங்களிலிருந்தும், மூளைக்குச் செல்கின்ற உணர்ச்சி நரம்புகளும், மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புகளும், தண்டுவடத்தின் வழியாகவே செல்கின்றன.

செய்திகளை நரம்புகள் மூலம் பெற்றுக் கொண்ட மூளையானது, உத்தரவுக ளைப் பிறப்பித்துத் தருகின்றது. இதனைத் தாங்கிச் செல்கின்ற ஒரு குழாயா கவே தண்டுவடம் பணி யாற்றுகிறது. 

தண்டுவடம், தன்மையோடு செயல்படுகின்ற போது தான், தகுந்த செயல்களை, உகந்த நேரத்தில் சிறப்பாகச் செய்ய முடிகிறது. தண்டுவடம் சில சமயங்களில், தானாகவே சில கட்டளைகளைக் கொடுக்கின்ற சந்தர்ப் பங்களுக்கு ஆளாகி விடுகிறது.
உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும்
அதற்கு உணர்ச்சி நரம்புகளும், செய்கை நரம்புகளும் தண்டுவடத்துடன் இணைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

உதாரணமாக நாம் தெரியாமல் ஒரு சூடான பொருளின் மீது கையை வைத்தவுடன், நம்மை அறியாமலே வெடுக்கென்று கையை எடுத்துக் கொள் கின்றோம். 
இவ்வாறு கையை எடுத்துக் கொள்ள உத்தரவு தந்தது மூளையா? இல்லை. தண்டுவடம் தான்.

இவ்விதம் மூளையின் உத்தரவின்றி, தானாகவே தண்டுவடம் உத்தரவைத் தந்து, சூழ்நிலையைச் சமாளித்து விடுகிறது. இந்தச் செயல்களை அனிச்சைச் செயல்கள் எனக் கூறுவர்.

அனிச்சைச் செயல்
அனிச்சைச் செயல்
தண்டுவடத்தில், தசை நடவடிக்கையை எடுக்கின்ற கேந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு தண்டுவடப் பகுதியும், உடலின் ஒவ்வொரு பாகத்துடன் தொடர்பு கொண்டி ருக்கிறது.

தசைகளில் ஒரு சூடான பொருள் படும்போது, அந்த உணர்ச்சியை, உணர்ச்சி நரம்பு தண்டு வடத்திற்கு எடுத்துச் செல்கிறது. உடனே, அத்துடன் இணைந்தி ருக்கும் செய்கை நரம்பானது ஒரு தசையைத் தூண்டி, இயங்கும்படி செய்து விடுகிறது.

தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள குறுக்கு இணைப்பு க்களினால், மேலும் கீழும் இயங்கி, பல்வேறு தசைப் பகுதிகளையும் தூண்டி விடுகிறது. இதனால், பாதிக்கப் படுகிற உறுப்பு, பாதிப்பிலிருந்து வெளி யேறுகிறது. இதையே அனிச்சை ச்செயல் என்கிறோம்.
அனிச்சைச்செயல் முடிந்த பிறகு, என்ன காரியம் நடந்தது என்பதை மட்டும், மூளை தெரிந்து கொள்கிறது. ஆயினும், தண்டுவடத்தின் பணிகள், மூளை யினாலே கட்டுப்படுத் தப்படுகின்றன.

மூளையின்  வெளிப்புற நரம்பு மண்டலம் 
மூளையின்  வெளிப்புற நரம்பு மண்டலம்
தண்டுவடமும், நரம்பு மண்டலத்தின் மத்திய பகுதியில் இருப்பதால், இதை மத்திய நரம்பு மண்டலம் எனலாம். 12 ஜோடி கபால நரம்புகள் மூளையி லிருந்தும், 31 ஜோடி தண்டுவட நரம்புகள் தண்டுவடத் திலிருந்தும், வெளியே வருகின்றன. 

இந்த நரம்புகளிலிருந்து பல்வேறு உறுப்புக் களுக்கும் திசுக்களுக்கும், பலவும் கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன. அவற்றின் கிளைக ளையும் வெளிப்புற நரம்பு மண்டலம் என்று நாம் அழைக்கலாம்.

உள்ளுறுப்புக்கள், சுரப்பிகள், மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றிற்கு, நரம்பூட்டம் அளிக்கும் பகுதிக்கு, தன்னிச்சை நரம்பு மண்டலம் என்று பெயர். 
நரம்பு செல்கள், அவற்றின் துணுக்குகள், நரம்பு இழை ஆகியவை தன்னிச்சை நரம்பு மண்டலத்தில் அடங்கு கின்றன. தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் நரம்பு இழைகள் என்று அழைக்கப்படு கின்றன. 

அவை கபால நரம்புகள், மற்றும் தண்டுவட நரம்புகள் ஆகிய வற்றின் ஒரு பகுதியாக அமைந்து, தன்னிச்சை நரம்பு முடிச்சு செல்களுக்குள் செல்கின்றன.

அங்கேயுள்ள நரம்பு முடிச்சு, பின் இழைகளென்று அழைக்கப் படுகின்ற நரம்பு இழைகள், உள்ளுறுப் புகளுக்குச் செல்கின்றன.

இந்த தன்னிச்சை மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன.

1. பரிவு நரம்புகள் 

 
2. துணைப் பரிவு நரம்புகள் 


பரிவு நரம்புகள் - Sympathetic nerves
பரிவு நரம்புகள் - Sympathetic nerves
தண்டுவடத்தின் வெளிக் கொம்புகளில் உள்ள செல் துணுக்குகள், தண்டு வடத்திலிருந்து, அதனதன் தண்டுவட நரம்புகளாக வெளி வந்து, அவற்றிலிருந்து பிரிந்து, பரிவு நரம்புத் தண்டை அடைகின்றன.

வலது இடது என்றுள்ள 1 ஜோடி பரிவு நரம்புத் தண்டு, முதுகெலும்புத் தண்டின் இரண்டு பக்கத்திலும் அமைந்துள்ளது. அதில் நரம்பு முடிச்சுகளும், அவற்றை இணைக்கும் கிளைகளும் காணப் படுகின்றன.

பரிவு நரம்புத் தண்டின் பணிகள், கழுத்துப் பகுதியின், மார்புப் பகுதியின் மற்று ம் வயிற்றுப் பகுதியின் முக்கிய இயக்க ங்களில் பங்கு பெறுவதாக அமைந்து ள்ளன.

பரிவு நரம்புகள் கழுத்துப் பகுதியிலுள்ள கழுத்து, தலைப் பகுதியின் உள்ளு றுப்புக்களும், நரம்பூட்டம் அளிக்கின்றன. அதாவது முன் தொண்டை, உமிழ் நீர்ச் சுரப்பிகள், கண்ணீர்ச் சுரப்பிகள், கண்பார் வையை விரிவடைச் செய்யும் தசைகள் யாவும் ஊட்டம் பெறுகின்றன.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

மார்புப் பகுதிகளுக்கு வருகிற பரிவு நரம்புகள், மார்பு தமணி, உணவுக் குழல், மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் ஆகியவற் றிற்கு கிளைகளை அனுப்பு கின்றன.

துணைப்பிரிவு பரிவு நரம்புகள் - 
Subclavian sympathetic nerves
துணைப்பிரிவு பரிவு நரம்புகள்- Subclavian sympathetic nerves
மூளைத் தண்டிலும், தண்டுவடத் திரிகப் பிரிவிலும் இவை காணப்ப டுகின்றன. பரிவு நரம்புகளும், உள்ளுறுப்புக்களில் பலவிதமான ஆதிக்கம் செலுத்திக் கட்டுப்படுத் துகின்றன. இவை இரண்டும் எதிர்மாறான வேலைகளைச் செய்கின்றன. 

உதாரணமாக, பரிவு நரம்புகள் ஏற்படுத்துகிற விளை வுகளைப் பாருங்கள். உமிழ் நீர், கண்ணீர் சுரப்பிகளின் சுரப்பு குறைகிறது. சிறிய தமனிகளும் சிரைகளும் சுருங் குகின்றன. இருதயத் துடிப்பு விகிதம் கூடுகிறது. 

குடலின் அலைகின்ற அசைவு தாமத மாகின்றது. இரைப்பையின் சுரப்புகள் குறைகின்றன. மூச்சுக் கிளைத் தசைகள் தளர்கின்றன. உடலில் உஷ்ண இழப்பு குறைகிறது.

ஆனால், துணைப்பிரிவு நரம்புப் பகுதியின் வேலையைப் பாருங்கள். கண் பார்வை சுருங் குகிறது. உமிழ்நீர், மற்றும் கண்ணீர் சுரப்பு ஊக்கு விக்கப் படுகிறது.
ஆன்லைனில் இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள !
இதயத் துடிப்பு விகிதம் குறைகிறது. குடலின் அலைகின்ற அசைவு கூடுதலா கிறது. இரைப்பைச் சுரப்பு தூண்டப்படுகிறது. மூச்சுக்கிளைத் தசைகள் சுருங்கு கின்றன. உடலில் உஷ்ண இழப்பு அதிகரி க்கிறது.
இந்த இரு பிரிவு நரம்புகளும் பல்வேறு உறுப்புக்கள் மீது எதிரெதிர் விளைவுகளை ஏற்படுத் தினாலும், எல்லாம் நன்மை யாகவே முடிகின்றன.

அதாவது, உறுப்புக்கள் எல்லாம் ஒருங்கி ணைக்கப் பெற்று, ஒரே அமைப்பாக மாறி, ஒழுங் காகவும் சிறப்பாகவும் பணி யாற்றும் செழுமை ஏற்பட்டு விடுகிறது.
காஸ் சிலிண்டருக்கு காப்பீடு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று !
அதாவது, இதயத்தின் வேலை, ஜீரண மண்டல சுரப்பிகள் இயக்கம், செல்களின் வளர்சிதை மாற்ற வேலைகள் எல்லாம் சீராகவும், ஜோராகவும் நடக்க உதவுகி ன்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)