மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் !

மூளையானது, நமது உடம்பின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் திகழ்கிறது. சிந்தனைக்கும் செயலிற்கும் அடிப்படையாக அமைவது மூளையேயாகும்.
மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்
அதன் முக்கியத் துவத்தை கருத்திற் கொண்டு படைத்தவன் அதனை எழிதில் சிதை வுறாவண்ணம் கபாலக் குழியில், மிகப் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்துள்ளான், 

மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்பு களாலும், முதுகுத் தண்டு நீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளி லிருந்தும், வெளிச் சேதங்க ளிலிருந்தும்;

குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத் திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப் படுகின்றது.

ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களும், சேதங்கங் களும் பல தீங்குகளை ஏற்ப டுத்துவது தவிர்க்க இயலாதது உள்ளது.

ஒரே இரவில் பல உயிர்களை பலி வாங்கிய கேமரூன் நயோஸ் ஏரி !

பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும்
இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல்
இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக் கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்று நோய்களால் பாதிக்கப் படுவது மிக அரிதானது. 

ஏனெனில், இரத்த மண்ட லத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும் பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணு யிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது.

இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது.

ஏனெனில் இதே குருதி -மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே இதற்கு காரணமாகும்.
மூளை தொற்று நோய்
தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்க ளுடன் சேர்ந்து தாண்டு கின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை.

வெஜ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோ ரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கிய மானவை.

உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பா ன்மை, மந்த அறிவு ஆகிய வையும் மூளையில் ஏற்படும் மாற்றங்க ளால் தோன்றுகின்றன.

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலை மையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற் பாடுகளான மூச்சு விடுதல்,
மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்
சமிபாடு (செரிமானம்), இதயத் துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பா டுகளையும், விழிப்பு ணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடு களையும் கட்டுப்ப டுத்துகிறது.

மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பா டுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றி ருக்கிறது.

சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு செய்வது எப்படி?

மனித மூளையின் எடை சுமார் 3 றாத்தலாகவும் (1.4 கிலோ). நல்ல அறிவா ற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை 4.4 றாத்த லாகவும் இருப்பதாக கணிக்கப் பெற்றுள்ளன.

மூளையின் பணிகள்

மூளையின் முக்கியமான பணிகளாக நாம் மூன்றைக் கொள்ளலாம்.

1 செய்திகளை மூளை ஏற்றுக் கொள்கிறது.

2 கட்டளைகளை அனுப்புகிறது.

3 செய்திகளை சேகரித்து, வைத்துக் கொண்டு அறிவுப் பணிகளை தொடர்கிறது.

மூளையின் பாகங்கள் 

மூன்று பாகங்களாக, மூளை பிரிக்கப்பட்டி ருக்கின்றது. அவை முறையே

1 பெரு மூளை

2 சிறு மூளை

3 முகுளம்

பெருமூளை - Cereberal
 பெருமூளை - Cereberal
இது மூளையிம் மற்றைய பாகங்ளை விடப் பெரியது. பெரு மூளை யானது, கபாலப் பெட்டியின் மேற்புற த்தையும், பின்புறத் தையும் ஒருங்கே அடைத்து க்கொண்டு அமைந் துள்ளது.

இதில் நெளிவுகளும், மடிப்புக்களும் இருப் பதனால், இதன் பரப்பளவு அதிகமாக இருக்கிறது. மிருகங்ளை விட மனித மூளையில் நெளிவும் மடி ப்புக்களும் இருப்பதனால் தான், மனிதன் மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவனாக விளங்கு கின்றான். 

பெரு மூளையின் பகுதியானது, உட்பகுதியில் வெண் மையாகவும் வெளிப்பகு தியில் சாம்பல் நிறமும் கொண்டதாக தோற்றமளி க்கிறது.

நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனை த்திற்கும் பெருமூ ளையே காரணமாக இருந்து உதவுகிறது. 

முக்கியமான ஐம் பொறிக ளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டு வடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன.

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

பார்வை நரம்புகள் பெரு மூளையின் பின்பு றத்திலும், சுவை, வாசனை, ஒலி அறியும் நரம்புகள், இதன் பக்கவாட்டிலும் அமைந்தி ருக்கின்றன.

சிறு மூளை 
சிறு மூளை - Cerebellaum
முகுளத்திற்குப் பின்புறமாக, பெரு மூளைக்குக் கீழே, கபாலத்தின் அடிப்பாக த்தில், சிறுமூளை அமைந் திருக்கிறது. இது மூன்று பிரிவுகளை உடையது. சிறு மூளையின் மேற் பரப்பில், பல மேடு பள்ளங்கள் இருக்கின்றன. 

மூளையின் மற்றைய பகுதிகளுடன், நரம்பு இழைகள் மூலம் சிறு மூளை தொடர்பு கொண் டுள்ளது.

உடல் உறுப்புக்களும், தசைகளும், அசைந்து, இயங்குகிற ஒருங்கிணைப்பு, அவற்றின் தெளிவான பண்பு, எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றிற்கு சிறு மூளை பொறுப்பாகும்.

தேகம் இயங்குகிற சமநிலையைப் பாதுகா க்கிறது. தசைகளின் விறைப்புத் தன்மையை இது கட்டுப் படுத்துகிறது. 
மது குடிப்பவர்கள், தடுமாறி தள்ளாடி நடப்பதன் காரணம், அந்த மதுவின் போதைத் தன்மை யானது சிறு மூளையை தாக்கி விடுவதாலே யேயாகும்.

முகுளம் 
முகுளம்
மூளையின் கீழ்ப்பகுதியிலே அமைந்திருக்கும் முகுளம், மூளையின் பகுதிக ளிலே, சிறியதாகவு இருக்கிறது. இந்த இடத்தில் தான் தண்டு வடமானது (முண்ணாண்) மூளையுடன் இணை கின்றது. 

இதிலிருந்து தொடங்குகிற நரம்புகள், இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கியமான உறுப்புக்களுடன் இணைந்தி ருக்கின்றன.

முகுளத்தில் சாம்பல், மற்றும் வெள்ளைப் பொருட்கள் உண்டு. வெள்ளைப் பொருளின் உள்ளேயுள்ள சாம்பல் பொருளில், ஏராளமான கருக்கள் (நூக்கியஸ்கள்) திரண்டுள்ளன.

தண்டு வடத்திலிருந்து மூளைக்குச் செல்கின்ற நரம்புகள், முகுளத்தின் வழியா கச் செல்வதால், அங்கே ஒரு புதிய விளைவு இடம் பெறுகிறது.

சுவையான வரகு அரிசி கேரட் சாதம் செய்வது எப்படி?

அதாவது, வலது புற மூளைப் பகுதியானது தேகத்தின் இடப்புற செயல்பா டுகளையும், இடப்புற மூளைப் பகுதியானது, தேகத்தின் வலப்புறச் செயல் பாடுக ளையும் கட்டுப் படுத்துகின்றது.

முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு. 
முகுளத்திற்கு இரண்டு பணிகள் உண்டு.
* அனிச்சைச் செயல்

* நரம்பு உந்துதல்ளை கடத்துதல்

சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற காரியங்கள் எல் லாம், யாருடைய விருப்பத்திற்கும் இன்றி, தானாகவே இடம் பெறுகின்ற தன்னிச்சைச் செயல்களாகும். 

இப்படிப்பட்ட தன்னிச் சையாக இயங்குகிற தானிய ங்கும் தசைகளுக்கு, முகுளத்திலி ருந்து தான் கட்டளைகள் கிடைக்கின்றன.
காலையில் சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?
முகுளமானது, மத்திய நரம்பு மண்டலத்தின் ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட உறுப்பாகும். முகுளத்தில் கோளாறுகள் ஏற்பட்டால், மூச்சு விடலும், இதயத்துடிப்பும் தடைப் பட்டுப்போய், மரணமே நிகழலாம்.

தண்டுவடம் - முண்ணாண்

தண்டுவடம் - முண்ணாண்
தண்டுவடமானது, முகுளத்திலிருந்து கிளம்பி, முதுகெலும்பின் நடுவிலுள்ள முள் ளெலும்புக் கால்வாய் வழியாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. நன்றாக நெகிழக்கூடிய 33 முள்ளெலு ம்புகளால் தண்டுவடம் காக்கப் படுகிறது. 

தண்டு வடமானது, ஒரு நீண்ட உருளையைப் போலிருக்கும். அதன் கடைசிப் பகுதியோ, குதிரை வாலைப் போ லிருக்கும். 

31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டு வடத்திலிருந்து கிளம்பி, தேகத்தி லுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புக ளுக்கும் செல்கின்றன.

இந்த நரம்புகள், தண்டு வடத்திலிருந்து வெளிவந்த பிறகு, சிற்சில இடங்களில் ஒன்றோ டொன்று பின்னிக் கொ ள்கின்றன. இந்த பின்னல் நிலையே வலை என்று அழைக்கப் படுகிறது. உ-ம் – கழுத்து வலை, இடுப்பு வலை

ஒவ்வொரு முதுகுத் தண்டு நரம்பிற்கும், இரண்டு வேர்கள் உள்ளன. 
முதுகுத் தண்டு நரம்பிற்கும், இரண்டு வேர்கள் உள்ளன.
I. செய்கை வேர்

முன்புறம் இருக்கும் இந்த செய்கை வேர்கள் வழியாக, மூளையின் உத்தர வுகள் மற்ற உறுப்புக்க ளுக்கும் தசைப் பகுதிக ளுக்கும் செல்கின்றன.

II. உணர்ச்சி வேர்

பின்புறம் இருக்கிற உணர்ச்சிவேரின் வழியாக, உடலின் பல உறுப்புக்களில் இருந்தும் செய்திகள், மூளையை நோக்கிச் செல்கின்றன.
முதுகு தண்டுவடத்தின் பணிகள் என்ன?
தேகத்தின் இடப்புறத் திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் வலது பக்கத் திற்குச் செல்கின்றன. தேகத்தின் வலது புறத்தி லிருந்து செல்லும் செய்திகள், மூளையின் இடது பக்கத்தை அடைகின்றன.
Tags: