ஒருசில அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்... இத படிங்க !

0

நம்முடைய உடலில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்க கூடிய சிறுநீரகங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் மொத்த உடலையும் பாதிக்க தொடங்கி விடும்.

ஒருசில அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்
உடல் உறுப்புக்களிலேயே மிகமிக முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும் சிறுநீரகம். அவை பழுதடைந்து போனால் உடலுக்கு தீவிரமான தீங்கு ஏற்பட்டு மரணம் கூட விளையலாம். 

அதன் அமைப்போ மிகவும் சிக்கல் வாய்ந்தது மட்டுமல்லாமல், அதன் செயல்பாடும் மிகவும் ஆழம் வாய்ந்த சிக்கல்கள் கொண்டது. 

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றா விட்டால் அல்லது உங்களுடைய உடலை சரியாக கவனிக்கா விட்டால் சிறுநீரகத்தை சேதப்படுத்துவதற்கு நீங்களே முதல் காரணமாக அமைந்து விடுகிறீர்கள். 

சிறுநீரகங்கள் இரத்தத்தில் காணப்படும் அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை நீக்குகின்றன. 

இவை வடிகட்டும் திறனை இழக்கும் போது, அதிக அளவு திரவம் மற்றும் கழிவுகள் உடலில் சேர்ந்து சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது உங்களுடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருசில அறிகுறிகள் காண்பிக்கும்.

தூக்கம்

தூக்கம்

‘பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது..’ என்ற பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் அதை தொடர்ந்து வரும் அடுத்த வரிகளான ‘பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்பவை கிட்டத்தட்ட நிஜமாகி விட்டது. 

இந்தியாவில் தூக்கமில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தூக்கமில்லாமல் பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல காரணங்களுக்காக தூக்கம் முக்கியமானது. குறிப்பாக ஒரு நல்ல இரவு தூக்கம் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது.  

நீங்கள் சரியாக தூங்காமல் உங்களுக்கு இருக்கக் கூடிய தூக்க பிரச்சனைகளும் சிறுநீரக செயலிழப்புக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. 

நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்லீப் அப்னியா என்னும் தூக்க பிரச்சனை அதிக அளவில் உள்ளது. 

இதற்கு என்ன காரணம் என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதை நிறுத்தும் போது, சிறுநீர் மூலமாக பொதுவாக வெளியேற்றப் படக்கூடிய நச்சுக்கள் உங்களுடைய ரத்தத்திலேயே இருக்கும். 

இதனால் நீங்கள் சரியாக தூங்குவதில் பிரச்சனைகள் ஏற்படும். நல்ல ஆரோக்கியத்திற்கு நல்ல இரவு தூக்கம் அவசியம். நீங்கள் தூங்குவதில் சிக்கல் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். 

பலவீனம் மற்றும் சோர்வு

பலவீனம் மற்றும் சோர்வு

வேலை, பயணம், நிலையான வாழ்க்கை, வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவைகளும் எப்போதும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும். 

சிறுநீரகத்தில் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க வைட்டமின் டி யை மாற்றுவதோடு எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை உருவாக்க வேண்டும். 

ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத பொழுது இந்த ஹார்மோன் உற்பத்தியும் குறைந்து நீங்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைவதை உணர்வீர்கள். 

கூடவே தொடர்ந்து தலைவலியும் உங்களுக்கு ஏற்படும். இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேட வேண்டும். அப்போது மறதி என்பது மாபெரும் பலமாக அமையும்.

வாய் துர்நாற்றம் மற்றும் வாயில் உலோக சுவை

வாய் துர்நாற்றம் மற்றும் வாயில் உலோக சுவை

சிறுநீரக செயலிழப்பு காரணமாக உங்களுடைய இரத்தத்தில் கழிவு பொருட்கள் தேங்குவது உங்கள் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். அதில் முக்கியமான ஒன்று வாயில் துர்நாற்றம் ஏற்படுவதும் வாயில் உலோகங்களின் சுவை போல தெரிவதும். 

இது உங்களுடைய இரத்த ஓட்டத்தில் அதிக அளவிலான நச்சுக்கள் இருப்பதற்கான அறிகுறிகள். வேறு பல நோய் காரணங்களுக்கும் வாயில் உலோக சுவை ஏற்படும். 

அதற்கான சிகிச்சைகளையும் எடுத்தும் இந்த சுவை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் அது சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

நமைச்சல் அரிப்பு மற்றும் வறண்ட தோல்

நமைச்சல் அரிப்பு மற்றும் வறண்ட தோல்

அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உங்களுடைய உடலில் இருந்து அதற்காக நீங்கள் லோஷன்கள், மருந்துகள் எடுத்துக் கொண்டும் 

அதை சரி செய்ய முடியாமல் இருந்தால் இது உங்களுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். 

சிறுநீரகத்தின் முக்கியமான வேலைகளில் ஒன்று உங்களுடைய இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்களை வெளியேற்றுவது. இதன் மூலமாக உங்களுடைய உடலில் உள்ள தாதுக்களின் சமநிலை பராமரிக்கப்படும். 

உங்களுடைய சிறுநீரகங்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் சம நிலையை சரியாக பராமரிக்க முடியாத பொழுது வறண்ட சருமம் மற்றும் அரிப்பு ஏற்பட்டு அதை குணப்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படும். 

முதுகு வலி

முதுகு வலி

சிறுநீரகம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது முதுகு வலியை ஏற்படுத்தும். இந்த முதுகு வலியானது மிகவும் மோசமாக முதுகின் கீழ் பக்கங்களில் விலா எலும்புக்கு கீழே ஏற்படும். 

இந்த இடங்கள் சிறுநீரகங்களுக்கு அருகாமையில் இருப்பதால் நீங்கள் இடுப்பு வலியை உணரக்கூடும். இத்தகைய வலிகள் பொதுவாக உங்களுடைய சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டிகளால் ஏற்படும். 

மேலும் காய்ச்சல் வாந்தி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் இருக்கும். முதுகுவலி என்றாலே தூங்கும் முறை தான் காரணம் என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. 

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

தீவிரமான உடற்பயிற்சி ஓட்டப்பயிற்சி வேகமான நடைப்பயிற்சி இப்படிப்பட்ட உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சிகளுக்குப் பிறகு சிறிதளவு மூச்சுத்திணறல் ஏற்படுவது இயல்பு. 

மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். 

ஆனால் நீங்கள் எந்த வேலையும் செய்யாமல், தீவிர உடற்பயிற்சி எதுவும் செய்யாமல், உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் இருக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உங்களுடைய சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.. இது இரண்டு காரணங்களால் நடக்கிறது ஒன்று உங்களுடைய நுரையீரலில் அதிக அளவிலான திரவம் உருவாகும் பொழுது. 

மற்றொன்று இரத்த சோகை காரணமாக உங்களுடைய உடலில் ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. ரத்த சோகை உடையவர்களுக்கு 10 அடி நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுத்தும்.. இவை இரண்டும் சிறுநீரக செயல்பாடு மோசமடைவதால் ஏற்படும். 

கணுக்கால் பாதம் மற்றும் கைகள் வீக்கம் 

கணுக்கால் பாதம் மற்றும் கைகள் வீக்கம்

சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் பொழுது உங்களுடைய முழு உடலில் திரவங்கள் அதிகமாகும். இந்தக் கூடுதல் திரவங்கள் உங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சோடியத்தை தேக்கி வைக்கிறது. 

இதன் காரணமாக உங்களுடைய கைகள், கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் இதயத்தின் வலது பக்க வால்வுகள் உட்பட, பல்வேறு இதய கோளாறுகளால், கால்களில் வீக்கம் ஏற்படலாம். 

கல்லீரல் செயலிழப்பிற்கு காரணம், மது பழக்கம், வைரஸ் தொற்று போன்றவை. அதன் வெளிப்பாடாகவும், வயிறுடன் சேர்ந்து, கால்கள் வீங்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உடல் முழுவதும் நீர் தேங்கி, முகம் உட்பட பல பாகங்கள் வீக்கத்துடன் காணப்படலாம். ஆனால், வெளிப்படையான அறிகுறியாக, கால்களின் வீக்கம் இருக்கும்.

கண்களில் வீக்கம்

கண்களில் வீக்கம்

உங்களுடைய சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று உங்களுடைய கண்களில் ஏற்படக்கூடிய வீக்கம். 

உங்களுடைய சிறுநீரில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதத்தால் இந்த வீக்கம் ஏற்படுகிறது. 

உங்களுடைய சிறுநீரகங்கள் பாதிப்படையும் பொழுது சிறுநீரில் வெளியேற்ற வேண்டிய அதிக அளவு புரதத்தை வெளியேறுவதற்கு பதிலாக உடலில் இருக்கக்கூடிய மற்ற பகுதிகளுக்கு மாற்ற தொடங்குகிறது.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உங்களுடைய உடல் நன்றாக வேலை செய்ய சிறுநீரகங்கள் இரத்த ஓட்ட மண்டலத்தை சரியாக செயல்படுத்தி இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது. 

உங்களுடைய சிறுநீரகங்கள் சேதமடையும் போது ரத்த ஓட்ட மண்டலத்தை சிறுநீரகத்தால் சரியாக கவனிக்க முடியாமல் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 

அதாவது உங்களுடைய சிறுநீரகங்கள் நெஃப்ரான்களால் ஆனது. இவை இரத்தத்தில் இருக்கக்கூடிய கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டுவதற்கு உதவுகிறது. 

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனையால் உங்களுடைய இரத்த நாளங்கள் சேதம் அடையும் பொழுது, உங்கள் நரம்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை பெறமுடியாது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

சிறுநீர் கழித்தலில் ஏற்படும் மாற்றங்கள்

சிறுநீர் கழித்தலில் ஏற்படும் மாற்றங்கள்

சிறுநீரின் நிறம், வாசனை, அடர்த்தி, தோற்றம் இப்படிப்பட்ட சிறுநீர் கழிப்பதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பொதுவாக உங்களுடைய சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். 

சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய முக்கியமான அறிகுறிகளில் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் கலந்து செல்வது மற்றும் சிறுநீரில் நுரை அதிகமாக செல்வது போன்றவை அடங்கும்.

முடிவு

ஒருசில அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்... இத படிங்க !

ஆகையால் இப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்ட உடனே சிறுநீரகத்தில் தான் பிரச்சனை என உடனடியாக நீங்கள் முடிவெடுக்கக் கூடாது. இந்த தகவல்கள் அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. 

உங்களுடைய உடலில் எந்த விதமான மாற்றங்கள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

பிரச்சனைகளை தெரிந்து கொண்டு சுயமாக மருந்து சாப்பிடுகிறேன் என தேவையில்லாமல் உடலை கெடுத்துக் கொள்ளக் கூடாது. 

உடலில் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோய் அறிகுறியாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையும் பரிசோதனையும் மிக மிக முக்கியம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)