கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை !

0

கோவை கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதி மூன்றாவது விதியில் குமார் (எ) லவேந்திரன் (49). அவர் மனைவி கவிதா (32). கோவை காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. 

கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை !
ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில், 

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு குமார் (எ) லவேந்திரனை திருமணம் செய்து தனது முதல் மகனுடன் வசித்து வந்துள்ளார். 

இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். 

மேலும் குமாரை திருமணம் செய்த பின் யோசுவா என்ற மகனை பெற்றெடுத்தார். லவேந்திரன் இலங்கைத் தமிழர். இவர் கோவையில் பழைய கட்டடங்களை உடைக்கும் பணி செய்து வருகிறார். 

இந்நிலையில் கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. 

இதனால், இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். நேற்று மாலை கவிதாவின் சகோதரர் நாகராஜன் அவர்களின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கு கவிதா இல்லை.

லவேந்திரனிடம் கேட்டபோது, ‘போன் பேசாதேன்னு சொன்னதுக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டா. ஒரு வாரம் ஆச்சு. அவ வந்தா முடிச்சுக் கட்டிடுவேன்’ என்று கூறினாராம்.

கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை !

இரவு அவர்கள் வீட்டில் கவிதா கதறும் சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு நாகராஜன் வீட்டுக்குள் சென்ற போது, கவிதாவை, லவேந்தரன் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறார். 

கவிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார். நாகராஜனைப் பார்த்தவுடன் லவேந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இது குறித்து நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து லவேந்திரனைத் தேடி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)